Monday 25 February 2013

‘வ‘-‘வௌ‘ வரிசையில் பழமொழிகள்

‘வ‘- வரிசையில் பழமொழிகள்

1.    வசந்தத்தில் உழை; கோடையில் உண்.
2.    வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும்
3.    வட்டிக்கு வாங்கி அட்டிகை பண்ணி, அட்டிகையை வைத்து வட்டியை கட்டுவான்.
4.    வட்டிக்கு ஆசை; முதலுக்கு கேடு.
5.    வடக்குப் பார்த்த மச்சு வீட்டைப் பார்க்கிலும் தெற்குப் பார்த்த குச்சு வீடு நல்லது.
6.    வடக்கே கருத்தால் மழை வரும்.
7.    வண்டு ஏறாத மலர் இல்லை
8.    வண்ணான் கையில் மாற்று.
9.    வண்ணானுக்கும் நிர்வாணிக்கும் உறவு என்ன?
10.    வணங்கின முள் பிழைக்கும்.
11.    வதந்தி ஒரு தீ
12.    வதந்தியை நம்பாதே!
13.    வரவு எட்டணா. செலவு பத்தணா!
14.    வரவுக்குத் தகுந்த செலவு
15.    வருந்தினால் வாராதது இல்லை
16.    வருமுன் காப்பாய்
17.    வருவது வந்தது என்றால் படுவது பட வேண்டும்
18.    வல்லவன் பம்பரம் மணலிலும் ஆடும்
19.    வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
20.    வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு
21.    வலியவன் வெட்டியதே வாய்க்கால்
22.    வலியை உணர்ந்தவன் வலியை அறிவான்
23.    வழவழத்த உறவைக்காட்டிலும் வைரம் பாய்ந்த பகை நன்று.
24.    வழியில் கிடக்கிற கொடரியை எடுத்து கால் மேல் போட்டுக்கொள்வானேன்?
25.    வளரும் காய் பிஞ்சிலே தெரியும்
26.    வளரும் பயிர் முளையிலே தெரியும்
27.    வளவனாயினும் அளவறிந்து அளித்துண்

‘வா‘- வரிசையில் பழமொழிகள்

1.    வாக்கு என்னும் கடன்
2.    வாக்கு கற்றவனுக்கு வாத்தியார் வேலை; போக்குக் கற்றவனுக்கு போலீஸ் வேலை.
3.    வாக்கு கெட்ட மாட்டை போக்குல விட்டுத் திருப்பு.
4.    வாக்கு கொடுக்காதே! கொடுத்தால் காப்பாற்று.
5.    வாங்குவதைப் போலிருக்க வேண்டும் கொடுப்பதும்
6.    வாத்தியார் பிள்ளை மக்கு; வைத்தியர் பிள்ளை சீக்கு.
7.    வாதத்திற்கு மருந்துண்டு, பிடிவாதத்துக்கு மருந்தில்லை.
8.    வாதம் ஊதி அறி; வேதம் ஓதி அறி.
9.    வாதம் வயோதிகருக்கு; பிடிவாதம் இளையவர்களுக்கு.
10.    வாய் நல்லதானால் ஊர் நல்லது
11.    வாழ்க்கை ஒரு போராட்டம்
12.    வாழ்வும் தாழ்வும் சில காலம்
13.    வாழ்வும் வீழ்வும் வாயாலே!
14.    வாழைப் பழத்தில் ஊசி ஏற்றினாற்போல
15.    வாய் கருப்பட்டி கை கருணைக்கிழங்கு
16.    வாய்ச் சொல் வீரனடி
17.    வாய் மதத்தால் வாழ்வு இழக்கும்.
18.    வாய்மையே வெல்லும்
19.    வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்
20.    வாயுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும்
21.    வாழ்கிறதும் கெடுகிறதும் நம் வாயினால்தான்.
22.    வாழ்வும் தாழ்வும் சில காலம்.
23.    வாழு, வாழ விடு.
24.    வாளினும் கூரியது நாவு.
25.    வானத்து மேலே எறிஞ்ச கல்லு அப்படியே நிற்காது.

‘வி‘- வரிசையில் பழமொழிகள்

1.    விண் பொய்த்தால் மண் பொய்க்கும்
2.    விடியும்முன் கும்மிருட்டு
3.    விதி எப்படியோ மதி அப்படி.
4.    விதி என்று உண்டென்றால் விதிவிலக்கு என்றும் உண்டு
5.    விதியை மதியால் வெல்
6.    விதி வலியது
7.    வியாதிக்கு மருந்துண்டு; விதிக்கு மருந்தில்லை.
8.    விரலுக்கேத்த வீக்கம்
9.    விருந்தும் மருந்தும் மூன்று நாள்
10.    விருப்பத்தால் ஆகாதது வீம்பினால் ஆகுமா?
11.    விரும்பிச் செய்தால் கரும்பாய் இனிக்கும்
12.    விரும்பியது கிட்டா, கிடைத்தது விரும்பு.
13.    விரை ஒன்று போட்டால் சுரை ஒன்று மளைக்குமா?
14.    வில்லேந்தியவன் எல்லாம் வீரன் அல்ல.
15.    வில்வப்பழம் தின்பார் பித்தம் போக; பனம்பழம் தின்பார் பசி போக.
16.    விழித்த முகம் சரியில்லை
17.    விளக்கின் அடியில் இருள் மண்டும்
18.    விளக்குமாத்துக்கு பட்டு குஞ்சலம்
19.    விள்க்கெண்ணெயைத் தடவிக்கிட்டு உருண்டாலும் ஒட்டுற மண்ணுதான் ஒட்டும்.
20.    விளையும் பயிர் முளையிலே தெரியும்
21.    வினை விதைத்தவன் வினை அறுப்பான்

‘வீ’ - வரிசையில் பழமொழிகள்

1.    வீட்டிலே எலி, வெளியிலே புலி.
2.    வீட்டிலே புலி, வெளியிலே எலி.
3.    வீட்டுச் செல்வம் மாடு, தோட்டச் செல்வம் முருங்கை.
4.    வீட்டை கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார்.

‘வெ’ - வரிசையில் பழமொழிகள்

1.    வெந்நீரால் வெந்த நாய் தண்ணீரைக் கண்டும் அஞ்சும்
2.    வெள்ளம் வருமுன் அணைபோட வேண்டும்
3.    வெள்ளிக்குப் போடுறதும், வேசிக்குப் போடுறதும் ஒண்ணு ....
4.    வௌக்கெண்ணெய் தடவிக்கிட்டு உருண்டாலும் ஒட்டுறதுதான் ஒட்டும்.
5.    வெளுத்ததெல்லாம் பாலாகுமா? கருத்ததெல்லாம் நீராகுமா?
6.    வெறுங்கை முழம் போடுமா?
7.    வெறும் வாய் மெல்லுகிற அம்மையாருக்கு அவல் அகப்பட்டது போல

‘வே’ - வரிசையில் பழமொழிகள்

1.    வேண்டாத மனைவி கைபட்டா குத்தம், கால் பட்டா குத்தம்
2.    வேணும்னா சக்க வேரிலேயும் காய்க்கும்
3.    வேலியே பயிரை மேய்ந்தால்?
4.    வேலியிலே போன ஓணானை வேட்டிக்குள்ளே விட்டதுபோல
5.    வேலைக்குத் தகுந்த வேஷம் போடு

‘ல‘&‘லௌ‘ வரிசையில் பழமொழிகள்

‘ல‘ வரிசையில் பழமொழிகள்
1. லங்கணம் பரம ஔஷதம்

‘ர‘ - ‘ரௌ‘ வரிசையில் பழமொழிகள்

ரா‘ - வரிசையில் பழமொழிகள்
1.    ராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை; ராச திசையில் கெட்டவனுமில்லை.
2.    ராசா மகளானாலும் கொண்டவனுக்குப் பெண்டுதான்.
3.    ராமனைப் போல ராசா இருந்தால் அனுமானைப்போல செவகனும் இருப்பான்.

 ரு‘ - வரிசையில் பழமொழிகள்

1.    ருசி கண்ட பூனை உரிக்கு உரி தாவுமாம்

ரெ‘ - வரிசையில் பழமொழிகள்

1.    ரெண்டு கையும் தட்டினால்தான் ஓசை வரும்.
2.    ரெண்டு மலை ஒண்ணு சேர்ந்தாலும்..... ரெண்டு முலை எப்போதும் ஒண்ணு சேரவே சேராது....
3.    ரெண்டும் ரெண்டும் நாலு

‘ய‘ - ‘யௌ‘ வரிசையில் பழமொழிகள்

‘ய‘ - வரிசையில் பழமொழிகள்
 

1.    யதார்த்தவாதி வெகு ஜன விரோதி
 

யா‘ - வரிசையில் பழமொழிகள்

1.    யாருமில்லாத ஊரில் அசுவமேத யாகம் செய்தானாம்
2.    யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்.

3.    யானை கறுத்தால் ஆயிரம் பொன் பெறும்; பூனை கறுத்தால் என்ன பெறும்?
4.    யானை வரும் பின்னே; மணியோசை வரும் முன்னே!
5.    யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும்
6.    யானைக்கும் அடி சறுக்கும்
7.    யானையைத் தேடி குடத்துக்குள் கையை விட்டது போல

‘ம‘&‘மௌ‘ வரிசையில் பழமொழிகள்

‘ம‘ - வரிசையில் பழமொழிகள்

1.    மகம் ஜெகத்தை ஆளும்; பரணி தரணி ஆளும்
2.    மகன் செத்தாலும் சாகட்டும், மருமகள் தாலி அறுக்கணும்.
3.    மட்டான போஜனம் மனதுக்கு மகிழ்ச்சி
4.    மடமைக்கு மருந்தில்லை
5.    மடியில் கனம், வழியில் பயம்.
6.    மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கினாற்போல
7.    மண்டையில் எழுதி மயிரால் மறைத்து இருக்கிறது
8.    மண்டையுள்ளவரை சளி போகாது
9.    மண் தோண்டுபவனுக்கு இடமும், மரம் வெட்டுபவனுக்கு நிழலும் தரும்
10.    மண் பிள்ளை ஆனாலும் தன் பிள்ளை
11.    மண்ணைத் தின்றாலும் மறையத் தின்ன வேண்டும்
12.    மணல் அணை கட்டுவதா?
13.    மணலை கயிராய் திரிப்பது
14.    மதியாதார் வாசலை மிதியாதிருப்பது நல்லது
15.    மதியும் அது; விதியும் அது.
16.    மதில் மேல் பூனை போல.
17.    மது உள்ளே மதி வெளியே.
18.    மந்திரத்தால் மாங்காய் விழுமா?
19.    மந்திரி இல்லா யோசனையும், ஆயுதம் இல்லாச் சேனையும் விழும்.
20.    மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல்.
21.    மந்திரிக்கும் உண்டு மதிகேடு
22.    மத்தளத்துக்கு இரு பக்கமும் இடி.
23.    மயிர் சுட்டுக் கரி ஆகுமா?
24.    மயிரிழையில் உயிர் பிழை
25.    மயிரைக்கட்டி மலையை இழு, வந்தால் மலை, போனால் மயிரு.
26.    மரம் வெட்டுகிறவனுக்கு நிழலும், மண் தோண்டுபவனுக்கு இடமும் கொடுக்கும்.
27.    மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்
28.    மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்!
29.    மருந்துக்கு மோளச் சொன்னா நிறைய [மண்ணுல] மோளுவா
30.    மருந்தும் விருந்தும் மூணு நாளைக்கு!
31.    மருந்தேயாயினும் விருந்தோடு உண்.
32.    மல்லாந்து படுத்துக்கொண்டு எச்சில் துப்பாதே
33.    மலிந்த சரக்கு கடைத் தெருவுக்கு வரும்
34.    மலை இலக்கானால் குருடனும் அம்பு எய்துவான்
35.    மலை முழுங்கி மஹாதேவனுக்கு கதவு அப்பளம்
36.    மலை முழுங்கிக்கு மண்ணாங்கட்டி பச்சடியா?
37.    மலையளவு  சாமிக்குக் கடுகளவு கற்பூரம்.
38.    மலையே விழுந்தாலும் தலையால் தாங்க வேண்டும்
39.    மலையைக் கிள்ளி எலியைப் பிடித்தானாம்
40.    மலையைப் பிளக்க சிற்றுளி போதும்
41.    மழலைச் செல்வமே ஏழைகளின் செல்வம்
42.    மரம் தன்னை வெட்டுகிறவனுக்கும் நிழல் தரும்
43.    மரியாதை கொடுத்து மரியாதை வாங்கு
44.    மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
45.    மருந்தே இல்லாத நோயை பொறுத்தே ஆகவேண்டும்
46.    மலையத்தனை சுவாமிக்கு தினையத்தனை பூ.
47.    மழை முகம் காணாத பயிரும் தாய் முகம் காணாத பிள்ளையும்
48.    மழை விட்டாலும் தூவானம் விட்டபாடில்லை
49.    மறப்போம், மன்னிப்போம்
50.    மன்னவன் எப்படி, மன்னுயிர் அப்படி.
51.    மன்னவர்கள் ஆண்டது எல்லாம் மந்திரிகள் ஆண்மை
52.    மன்னுயிரும் தன்னுயிர்போல நினை
53.    மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
54.    மனம் கொண்டது மாளிகை.
55.    மனம் தடுமாறினால் மாற்றானுக்கு வலிமை
56.    மனம் போல் வாழ்வு
57.    மனம் விரும்புவதை எல்லாம் பேசுபவன், மனம் வெறுப்பதை எல்லாம் கேட்க நேரிடும்
58.    மனதறியப் பொய் உண்டா?
59.    மனத்தில் பகை; உதட்டில் உறவு.
60.    மனதில் இருக்கும் ரகசியம் மதிகேடனுக்கு வாக்கினிலே
61.    மன முரண்டிற்கு மருந்தில்லை
62.    மனைவி இனியவளானால் கணவன் இனியவன் ஆவான்

மா‘ - வரிசையில் பழமொழிகள்

1.    மா பழுத்தால் கிளிக்காம்; வேம்பு பழுத்தால் காக்கைக்காம்.
2.    மாட்டுக்கு கொம்பு, மனிதனுக்கு நாக்கு.
3.    மா£டம் இடிந்தால் கூடம்
4.    மாடு கிழமானாலும் பாலின் சுவை போகுமா?
5.    மாடு கெட்டால் தேடலாம்; மனிதர் கெட்டால் தேடலாமா?
6.    மாடு மேய்க்காமல் கெட்டது; பயிர் பார்க்காமல் கெட்டது.
7.    மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும்.
8.    மாமியார் உடைத்தால் மண் சட்டி; மருமகள் உடைத்தால் பொன் சட்டி.
9.    மாமியார் மெச்சின மருமகளும் இல்லை; மருமகள் மெச்சின மாமியாரும் இல்லை.
10.    மாமியார் வீடு மஹா சௌக்கியம்
11.    மாமியாரும் ஒருவீட்டு மருமகளே!
12.    மாவில் இருக்கும் மணம், கூழில் இருக்கும் குணம்
13.    மாவுக்கேத்த பணியாரம்
14.    மாரடித்த கூலி மடி மேலே.
15.    மாரிக்காலத்தில் பதின்கல மோரும் கோடைக்காலத்தில் ஒருபடி நீருஞ்சரி
16.    மாரியல்லாது காரியமில்லை
18.    மாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்கும்
19.    மாற்றனுக்கு இடம் கொடேல்
20.    மானம் பெரிதா? உயிர் பெரிதா?
21.    மானைக் காட்டி மானைப் பிடிப்பார்

 மி‘ - வரிசையில் பழமொழிகள்

1.    மிஞ்சியது கொண்டு மேற்கே போகுதல் ஆகாது
2.    மிதித்தாரைக் கடியாத பாம்பும் உண்டோ?
3.    மின்னல் அடிக்காமல் இடி விழுந்தது போல
4.    மின்னுக்கெல்லம் பின்னுக்கு மழை

 மீ‘ - வரிசையில் பழமொழிகள்

1.    மீகாமன் இல்லாமல் மரக்கலம் ஓடாது
2.    மீதூண் விரும்பேல்
3.    மீன் வலையில் சிக்கும்; திமிங்கலம் சிக்குமா?
4.    மீன் வித்த காசு நாறது.

மு‘ - வரிசையில் பழமொழிகள்

1.    முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா?
2.    முகஸ்துதியும் ஒரு வசையே
3.    முகத்தில் கரி பூசுவது
4.    முகத்துக்கு முகம் கண்ணாடி
5.    முகம் நல்லா இல்லேன்னா கண்ணாடி என்ன செய்யும்?
6.    முங்கி முங்கி குளித்தாலும் காக்கை அன்னம் ஆகாது.
7.    முட்டாள் தனத்துக்கு முதல் பாக்குக்காரன்
8.    முட்டையிட்ட கோழிக்குத் தெரியும் வலி
9.    முடியுள்ள சீமாட்டி கொண்டை முடிப்பாள்
10.    முத்துக் குளிக்க நினைப்பவன் மூச்சை அடக்க வேண்டும்
11.    முத்தால் நத்தை பெருமைப் படும்; மூடர் எத்தாலும் பெருமைப்படார்.
12.    முதல் கோணல் முற்றும் கோணல்
13.    முதல் தவறை மன்னிப்போம்
14.    முதலியார் ஜம்பம் விளக்கெண்ணெய்க்குக் கேடு
15.    முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா.
16    முப்பது வருடம் வாழ்ந்தவெனும் இல்லை; முப்பது வருடம் தாழ்ந்தவெனும் இல்லை.
17.    முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்.
18.    முயற்சி திருவினையாக்கும்
19.    முயன்றால் முடியாதது இல்லை
20.    முருங்கை பருத்தால் தூணாகுமா?
21.    முருங்கையை ஒடிச்சு வளர்க்கணும், பிள்ளையை அடிச்சு வளர்க்கணும்.
22.    முலை கொடுத்தவள் மூதேவி; முத்தம் கொடுத்தவள் சீதேவி.
23.    முழுக்க நனைந்தபின் முக்காடு எதற்கு?
24.    முழுப்பட்டினியைவிட அரை வயிற்றுக் கஞ்சியே மேல்
25.    முள்மேல் விழுந்த சேலையைப் பார்த்துதான் எடுக்க வேண்டும்.
26.    முள்ளில்லாமல் ரோஜாவா?
27.    முள்ளை முள்ளால் எடு.
28.    முள்ளுக்கு மனை சீவி விடுவார்களா?
29.    முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
30.    முற்றும் நனைந்தவனுக்கு ஈரம் ஏது?
31.    முன் ஏர் போன வழி, பின் ஏர்.
32.    முன் கை நீண்டால் முழங்கை நீளும்.
33.    முன் நேரம் கப்பல்காரன்; பின் நேரம் பிச்சைக்காரன்.
34.    முன் வைத்த காலை பின் வைக்காதே!
35.    முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?
36.    முன்னால் போனால் கடிக்கிறது; பின்னால் போனால் உதைக்கிறது.
37.    முன்னேறு பின்னேறு

 மூ‘ - வரிசையில் பழமொழிகள்

1.    மூடமூட ரோகம்
2.    மூடன் உறவு அபாயம்
3.    மூத்தது மோழை; இளையது காளை.
4.    மூத்தோர் சொல் வார்த்தை அமுதம்
5.    மூலிகை அறிந்தால் மூவுலகையும் ஆளலாம்

 மெ‘ - வரிசையில் பழமொழிகள்

1.    மெத்தப் படித்தவன் கடைக்குப்போனால் விற்கவும் மாட்டான், வாங்கவும் மாட்டான்.
2.    மெத்தப் படித்தவன் சுத்த பைத்தியக்காரன்
3.    மெத்தப் பேசுவான் மிகுந்த பொய்யன்
4.    மெய் சொல்லி கெட்டவனுமில்லை; பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை.
5.    மெய் மூன்றாம் பிறை; பொய் பூரண சந்திரன்.
6.    மெல்ல பாயும் தண்ணீர் கல்லையும் குழியாக்கும்

 மே‘ - வரிசையில் பழமொழிகள்

1.    மேருவைச் சேர்ந்த காகமும் பொன் நிறம்
2.    மேலே எறிஞ்ச கல்லு கீழே வந்துதானே ஆக வேண்டும்.
3.    மேற்கே மழை பெய்தால் கிழக்கே வெள்ளம் வரும்

மொ‘ - வரிசையில் பழமொழிகள்

1.    மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடாதே!
2.    மொழி தப்பினவன் வழி தப்பினவன்

மோ‘ - வரிசையில் பழமொழிகள்

1.    மோகம் முப்பது நாள்; ஆசை அறுபது நாள்.

மௌ‘ - வரிசையில் பழமொழிகள்

1.    மௌனம் கலக நாசினி
2.    மௌனம் சம்மதம்
3.    மௌனம் மலையை சாதிக்கும்

‘ப‘-‘பௌ‘ வரிசையில் பழமொழிகள்

‘ப‘- வரிசையில் பழமொழிகள்

1.    பக்கச் சொல் பதினாயிரம்
2.    பக்தி உண்டானால் முக்தி உண்டாகும்
3.    பகலில் பக்கம் பார்த்துப் பேசு; இரவில் அதுவும் பேசாதே!
4.    பகிர்ந்த வேலை பளுவாயிராது.
5.    பகுத்தறியாமல் துணியாதே! படபடப்பாகச் செய்யாதே!
6.    பகையாளியை உறவாடிக் கெடு
7.    பகைவர் உறவு புகை எழும் நெருப்பு.
8.    பங்குனி என்று பருப்பதுமில்லை; சித்திரை என்று சிறுப்பதுமில்லை.
9.    பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் ஒட்டுமா?
10.    பச்சை மரத்துக்கு இத்தனை என்றால் பட்ட மரத்துக்கு எத்தனை?
11.    பசி உள்ளவன் ருசி அறியான்
12.    பசி வந்தால் சுகி வேண்டாம்; நித்திரை வந்தால் பாய் வேண்டாம்.
13.    பசி வந்தால் பத்தும் பறந்து போகும்
14.    பசி ருசி அறியாது
15.    பசித்தார் பொழுதும் போகும்; பாலுடன் அன்னம் புசித்தார் பொழுதும் போகும்.
16.    பசித்துப் புசி, ருசித்துக் குடி
17.    பசியாமல் இருக்க மருந்து தருகிறேன், பழஞ்சோறு போடு என்கிறான்.
18.    பசு கருப்பென்றால் பாலும் கருப்பாகுமா?
19.    பசுத்தோல் போர்த்திய புலி
20.    பசு விழுந்தது புலிக்குத் தாயம்.
21.    பசுவிலும் ஏழை இல்லை; பார்ப்பாரிலும் ஏழை இல்லை.
22.    பசுவை அடித்து செருப்பை தானம் கொடுத்தானாம்.
23.    பஞ்சும் நெருப்பும் ஒன்றாய் கிடக்குமா?
24.    பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்
25.    பட்டணத்தாள் பெற்ற குட்டி பணம் பறிக்கவல்ல குட்டி
26.    பட்டணத்து நரியைப் பனங்காட்டு நரி ஏய்த்ததாம்.
27.    பட்டா உன் பேரில்; சாகுபடி என் பேரில்.
28.    பட்டிக்காட்டுக்குச் சிகப்புத் துப்பட்டி பீதாம்பரம்
29.    பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்கு விலை சொல்கிறான்
30.    பட்டுச் சட்டைக்குள் பீதாம்பரம்
31.    பட்டுச் சட்டைக்குள் இரும்புக் கரம்
32.    பட்டும் பட்டாடையும் பெட்டியிலிருக்கும்; காக்காசு கந்தையில் ஓடி உலாவும்.
33.    படிக்கிறது திருவாய் மொழி; இடிக்கிறது பெருமாள் கோயில்.
34.    படுத்துவாரெல்லாம் படுத்த, இந்த கடுத்த வாயுமில்லா கடிக்கு
35.    படுப்பது குச்சு வீட்டில்; கனவு காண்பது மச்சு மாளிகை.
36.    படை முகத்திலும் அறிமுகம் வேண்டும்.
37.    படைக்கு ஒருவன்; கொடைக்கு ஒருவன்.
38.    படையிருந்தால் அரணில்லை
39.    பண்ணப் பண்ண பலவிதம்
40.    பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்
41.    பணக்காரன் பின்னும் பத்துப் பேர்; பைத்தியக்காரன் பின்னும் பத்துப் பேர்.
42.    பணத்தைப் பார்ப்பதா? பழமையைப் பார்ப்பதா?
43.    பணம் இல்லாதவன் பிணம்
44.    பணம் உண்டானால் மணம் உண்டு.
45.    பணம் குலம் அறியும். பசி கறி அறியும்.
46.    பணம் நமக்கு அதிகாரியா? நாம் பணத்திற்கு அதிகாரியா?
47.    பணம் பத்தும் செய்யும்
48.    பணம் பந்தியிலே கு(ல)ணம் குப்பையிலே!
49.    பணம் பாதாளம் வரை பாயும்
50.    பணம் பெருத்தா ....பறச்சேரியில் போடு....
51.    பணம் வந்தால் பத்தும் பறந்து போகும்
52.    பத்து பேருக்கு பல் குச்சி, ஒருவனுக்கு தலைச் சுமை.
53.    பத்து பேரோட பதினோராவது ஆளாக இருக்க வேண்டும்
54.    பதவி வர பவிசும் வரும்
55.    பதறாத காரியம் சிதறாது
56.    பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழனும்
57.    பந்திக்கு இல்லாத வாழக்காய் பந்தலில் கட்டித் தொங்குது.
58.    பந்திக்கு முந்து; படைக்குப் பிந்து.
59.    பந்தியிலே வேண்டாம் வேண்டாம் என்றாலும், இலை பொத்தல் என்கிறான்.
60.    பம்மாத்துக் குளம் அழிஞ்சு போச்சு பயக்கள கூப்பிடு மீன் பிடிக்க
61.    பரணியிலே பிறந்தால் தரணி ஆழ்வான்
62.    பருத்திக்கு உழும் முன்னே தம்பிக்கு எட்டு முழம்
63.    பரு மரத்தை அண்டிய பல்லியும் சாகாது.
64.    பருவத்தே பயிர் செய்.
65.    பல்லாக்கு ஏற யோகம் உண்டு; உன்னி ஏற ஜீவன் இல்லை
66.    பல்லார் முனியப் பயனில சொல்லுவான், எல்லாரும் எள்ளப்படும்.
67.    பல்லு போனால் சொல்லு போச்சு
68.    பல்லு முறியத் தின்ன எல்லு முறிய வேலை செய்!
69.    பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டுவான்
70.    பல மனிதர்கள்; பல ருசிகள்.
71.    பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான்
72.    பழக்கம் வழக்கத்தை மாற்றும்
73.    பழகப் பழக பாலும் புளிக்கும்
74.    பழந்தேங்காயில்தான் எண்ணெய்
75.    பழம் தின்று கொட்டை போட்டவன்
76.    பழம் நழுவி பாலில் விழுந்தது
77.    பழம் பழுத்தால், கொம்பிலே தங்காது.
78.    பழம் பெருச்சாளி
79.    பழிக்குப் பழி, ரத்தத்துக்கு ரத்தம்
80.    பழுத்த ஓலையைப்பார்த்து குருத்தோலை சிரித்ததாம்
81.    பழுத்த பழம் கொம்பில் நிற்குமா?
82.    பழுதுபடாது முழுதாய்த் திரும்புவது
83.    பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது.
84.    பள்ளத்திலே இருந்தா பொண்டாட்டி, மேட்டிலே இருந்தா அக்கா!
85.    பறையர் தெருவில் வில்வ மரம் முளைத்தது போல
86.    பறையன் பொங்கல் இட்டால் பகவானுக்கு ஓராதோ?
87.    பன்றி குட்டி போட்டது போல
88.    பன்றி பல குட்டி, சிங்கம் ஒரு குட்டி.
89.    பன்றிபின் செல்லும் கன்றும் மலம் தின்னும்
90.    பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.
91.    பனிப் பெருக்கில் கப்பல் ஓட்டுவது போல
92.    பனி பெய்தால் மழை இல்லை; பழம் இருந்தால் பூ இல்லை.
93.    பனி பெய்து குடம் நிறையுமா?
94.    பனை நிழலும் நிழலோ? பகைவர் உறவும் உறவோ?
95.    பனை வெட்டின இடத்தில் கழுதை வட்டம் போட்டது போல
96.    பனையால் விழுந்தவனை பாம்பு கடித்தது போல
97.    பனையின் கீழ் நின்று பால் குடித்தாலும் கள் என்றே நினைப்பார்கள்

 பா‘- வரிசையில் பழமொழிகள்

1.    பாசமற்றவன் பரதேசி
2.    பாடப் பாட ராகம்
1.    பாடிப் பாடிக் குத்தினாலும் பதரில் அரிசி இல்லை
2.    பாடுபட்டால் பலனுண்டு
3.    பாம்பாட்டிக்குப் பாம்பிலே சாவு, கள்ளனுக்கு களவிலே சாவு .
4.    பாம்பின் கால் பாம்பறியும்
5.    பாம்பு கடிச்சி படக்குன்னு போக
6.    பாம்புக்குப் பால் வார்த்தாலும் பாம்பு நஞ்சைத்தான் கக்கும்.   
7.    பாம்பென்றால் படையும் நடுங்கும்
8.    பாம்பை பாம்பு கடிக்காது
9.    பாவம் ஓரிடம், பழி ஓரிடம்.
10.    பாவி போன இடம் பாதாளம்
11.    பாய் மரம் இல்லா மரக்கலம் போல
12.    பாயுற மாட்டுக்கு முன்னே வேதம் சொன்னது போல
13.    பார்க்கக் கொடுத்த பணத்துக்கு வெள்ளிக்கிழமையா?
14.    பார்க்க மறுப்பவன் பெருங்குருடன்; கேட்க மறுப்பவன் வெறும் செவிடன்.
15.    பார்த்தால் பூனை, பாய்ந்தால் புலி
16.    பார்வையில் இல்லாதவன் மனதிலும் நில்லான்
17.    பாராத உடைமை பாழ்
18.    பால் பசுவை கன்றிலே தெரியும்; பாக்கியவான் பிள்ளையை முகத்திலே தெரியும்
19.    பாலைக் குடித்தவனுக்கு பாலேப்பம்; கள்ளை குடித்தவனுக்கு கள்ளேப்பம்.
20.    பாலை வனச் சோலை
21.    பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்
22.    பாலும் வெள்ளை; மோரும் வெள்லை.
23.    பாலுமாச்சு; மருந்துமாச்சு.
24.    பானகத் துரும்பு

  பி‘- வரிசையில் பழமொழிகள்

1.    பிச்சை எடுத்தும் சத்துருவின் குடியைக் கெடு
2.    பிச்சை போட்டு கெட்டவன் உண்டா?
3.    பிச்சைக்கு மூத்தது கச்சவடம்
4.    பிச்சைக்கு வந்தவன் பெண்ணுக்கு பாப்பிள்ளையா?
5.    பிரிவே சரிவு
6.    பிள்ளை ஒன்று பெறாதவன் உள்ள அன்பை அறியான்
7.    பிள்ளை பெறுமுன் பெயர் வைக்காதே
8.    பிள்ளை பெறப் பெறப் ஆசை, பணம் சேரச் சேர ஆசை.
9.    பிள்ளையார் பிடிக்கப் போயி குரங்காப் போச்சு.
10.    பிள்ளையாரைப் பிடித்த சனியன் அரச மரத்தையும் பிடித்ததாம்
11.    பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டினாற்போல
12.    பிறப்பிலும் இறப்பிலும் அனைவரும் சமம்
13.    பிறவிக் கவி
14.    பிறவிக் குணம் மாறாது
15.    பின்னே என்பதும், பேசாமல் இருப்பதும், இல்லை என்பதற்கு அடையாளம்.

  பீ‘- வரிசையில் பழமொழிகள்

1.    பீலி பெய்யினும் அச்சிறுகும்

பு‘- வரிசையில் பழமொழிகள்

1.    புகழ் இழந்தவன் பாதி இறந்தவன்
2.    புத்தி கெட்ட ராஜாவுக்கு மதி கெட்ட மந்திரி
3.    புத்திமான் பலவான் ஆவான்
4.    புதியவனை நம்பி பழையவனை கை விடாதே!
5.    புலி பசிச்சாலும் புல்லைத் தின்னாது
6.    புலி பதுங்குவது பாய்வதற்கே
7.    புலி வந்த கதை போல்
8.    புலி வாலை பிடித்த கதை
9.    புலிக்குப் பிறந்து நகம் இல்லாமல் போகுமா?
10.    புலிக்கு வாலாவதைவிட எலிக்கு தலையாவது மேல்.
11.    புழுக்கை ஒழுக்கம் அறியாது; பித்தளை நாற்றம் அறியாது.
12.    புளிய மரத்தில் ஏறினவன் பற்கூசினால் இஅறங்கி வருவான்

பூ‘- வரிசையில் பழமொழிகள்

1.    பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது.
2.    பூ விற்ற காசு மணக்குமா? நாய் விற்ற காசு குரைக்குமா?
3.    பூமியைப் போல பொறுமை வேண்டும்
4.    பூசப் பூசப் பொன் நிறம்
5.    பூசனிக்காய் எடுத்தவனை தோளிலே தெரியும்
6.    பூவுக்குள் புயல்
7.    பூனைக்கு கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம்.
8.    பூனை கொன்ற பாவம் உன்னோடு, வெல்லம் தின்ற பாவம் என்னோடு.
9.    பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருண்டு போச்சுன்னு நினைத்ததாம்

பெ‘- வரிசையில் பழமொழிகள்
1.    பெட்டிப் பாம்பாய் அடங்கு
3.    பெண் என்றால் பேயும் இரங்கும்
3.    பெண் பிறந்தபோதே புருஷன் பிறந்திருப்பான்
4.    பெண் புத்தி பின் புத்தி
5.    பெண் வளர்த்தி பீர்க்கங் கொடி
6.    பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு; பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு.
7.    பெண்ணின் கோணல், பொன்னிலே நிமிரும்
8.    பெருங்காயம் வைத்த பண்டம்
9.    பெருமாள் இருக்கும் வரையில் திருநாளும் இருக்கும்
10.    பெருமையும் சிறுமையும் வாயால் வரும்
11.    பெற்ற தாய் செத்தால் பெற்ற அப்பன் சித்தப்பன்
12.    பெற்ற தாய் பசித்திருக்க பிராமண போஜனம் செய்வது போல
13.    பெற்ற மனம் பித்து; பிள்ளை மனம் கல்லு.

பே‘- வரிசையில் பழமொழிகள்
1.    பேச்சில் ராவணன், பின்னர் கும்பகர்ணன்.
2.    பேச்சுக் கற்ற நாய் வேட்டைவ்கு ஆகாது
3.    பேசப் பேச எந்த பாஷையும் வரும்
4.    பேசப் பேச மாசு அறும்
5.    பேசாது இருந்தால் பிழை ஒன்றும் இல்லை
6.    பேசுமுன் நன்கு ஆலோசி
7.    பேசுர பேச்சில அஞ்சு மாசப் பிள்ளையும் வழுகி விழுந்திரும்
8.    பேய் சிரித்தாலும் ஆகாது; அழுதாலும் ஆகாது.
9.    பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் புளிய மரம் ஏற வேண்டும்
10.    பேர் இல்லா சந்நதி பாழ்; பிள்ளை இல்லாச் செல்வம் பாழ்.
11.    பேராசை பெரு நஷ்டம்
12.    பேனைப் பெருமாளாக்காதே!

  பை‘- வரிசையில் பழமொழிகள்

1.    பைய மென்றால் பனையையும் மெல்லலாம்

பொ‘- வரிசையில் பழமொழிகள்
1.    பொங்கின பால் பொயப்பால்
2.    பொங்கும் காலம் புளி; மங்கும் காலம் மாங்காய்.
3.    பொய் இருந்து புலம்பும்; மெய் இருந்து விழிக்கும்.
4.    பொய் சொல்லி வாழ்ந்தவனும் இல்லை; மெய் சொல்லி வீழ்ந்தவனும் இல்லை.
5.    பொய் சொன்ன வாய்க்கு பொரியும் கிடைக்காது.
6.    பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது.
7.    பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லனும்
8.    பொய் நின்று மெய்யை வெல்லுமா?
9.    பொய்யான நண்பனைவிட மெய்யான எதிரி மேல்.
10.    பொய்யான பொருளாசை மெய்யான அருளாசையை விலக்கும்.
11.    பொற்கலம் ஒலிக்காது, வெண்கலம் ஒலிக்கும்.
12.    பொறாமைத்தீ தன்னையே அழிக்கும்
13.   பொறி வென்றவனே அறிவின் குருவாம்   
14.    பொறுத்தார் பூமியாழ்வார், பொங்கினார் காடாள்வார்
15.   பொறுமை அருமருந்து
16.    பொறுமை கடலினும் பெரிது
17.    பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு
18.   பொன் ஆபரணத்தைக் காட்டிலும் புகழாரம் பெரிது
19.    பொன் குடத்துக்குப் பொட்டு எதற்கு?
20.    பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பது போல

‘போ‘- வரிசையில் பழமொழிகள்
1.    போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து
2.    போரோட திங்கிற மாட்டுக்குப் பிடுங்கிப்போட்டு கட்டுமா?
3.    போன மாட்டைத் தேடுவாரும் இல்லை; மேய்த்த கூலி கொடுப்பாரும் இல்லை.
4.    போன ஜுரத்தை புளி இட்டு அழைத்தது போல
5.    போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்

‘ந‘-‘நௌ‘ வரிசையில் பழமொழிகள்

‘ந‘--- வரிசையில் பழமொழிகள்

1.    நக்குண்டார் நாவெழார்
2.    நகமும் சதையும் போல; உடலும் உயிரும் போல.
3.    நகத்தால் கிள்ள வேண்டியதை கோடாரியால் வெட்டுகிறான்
4.    நஞ்சு நாலு கலம் வேணுமா?
5.    நஞ்சு பிழிந்த சேலை.
6.    நஞ்சு மரமானாலும் நட்டவர் வெட்டார்.
7.    நஞ்சுக்குள் இருந்தாலும் நாகமணி; குப்பைக்குள் இருந்தாலும் குன்றிமணி.
8.    நட்டத்துக்கு ஒருவன்; நயத்துவ்கு ஒருவன்.
9.    நட்டுவன் பிள்ளைக்கு கொட்டிக் காட்ட வேண்டுமா?
10.    நட்பு காலத்தைத் தேய்க்கும்
11.    நடக்க அறியாதவ்னுக்கு நடு வீதி காத வழி.
12.    நடந்த பிள்ளை தவழுதாம் தாயார் செய்த புண்ணியத்தாலே!
13.    நடந்தால் நாடெல்லாம் உறவு; படுத்தால் பாயும் பகை.
14.    நடு ஊரில் நச்சு மரம் பழுத்தற்று
15.    நண்டு கொழுத்தால் வளையில் இராது; தண்டு கொழுத்தால் தரையில் இராது.
16.    நண்டைச் சுட்டு நரியை காவல் வைப்பதா?
17.    நத்தையின் வயிற்றில் முத்து
18.    நம் குடுமி அவன் கையில்
19.    நம்பினாரை நட்டாற்றில் விடலாமா?
20.    நமக்கு ஆகாதது நஞ்சோடு ஒக்கும்.
21.    நமன் அறியாத உயிரும் நாரை அறியாத குளமும் உண்டா?
22.    நமன் எடுத்துப் போகும்போது நழுவி விழுந்த ஜீவன்
23.    நமனுக்கு நாலு பிள்ளை கொடுத்தாலும் உறவுக்கு ஒரு பிள்ளை கொடுக்க மாட்டான்
24.    நயத்திலாவது, பயத்திலாகாது.
25.    நரி கொழுத்தென்ன? காஞ்சீரம் பழுத்தென்ன?
26.    நரி நாலு கால் திருடன்; இடையன் இரண்டு கால் திருடன்.
27.    நரி முன்னே நண்டு குட்டிக் கரணம் போட்டதாம்
28.    நரி வால் கொண்டு கிணற்றின் ஆழம் பார்க்கலாமா?
29.    நரிக்கு இடங்கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்குமாம்.
30.    நரிக்குட்டிக்கு ஊளையிட பழக்க வேண்டுமா?
31.    நரிக்கு கொண்டாட்டம், நண்டுக்குத் திண்டாட்டம்.
32.    நரியூரை விட்டு புலியூருக்குப் போனேன்; புலியூர் நரியூர் ஆயிற்று.
33.    நரை திரை இல்லை; நமனும் அங்கில்லை.
34.    நல் இணக்கமல்லது அல்லற் படுத்தும்.
35.    நல்ல சேவைக்கு நல்ல பரிசு
36.    நல்ல பொருளை எறியாதே; தேவையெனத் திரியாதே.
37.    நல்ல மரத்தில் புல்லுருவி
38.    நல்ல மாட்டுக்கு ஒரு சோடு
39.    நல்ல வாயன் சம்பாதித்ததை நாற வாயன் சாப்பிட்டான்
40.    நல்ல வேளையில் நாழிப் பால் கறவாத்து கன்று செத்து கலப் பால் கறக்குமா?
41.    நல்ல தொடக்கம் பாதி வெற்றி.
42.    நல்ல நூல் நல்ல நண்பன்
43.    நல்ல பாம்பு ஆடியது கண்டு நாக்குப் பூச்சி ஆடியது
44.    நல்ல மாட்டுக்கு ஒரு சூடு; நல்ல மனிதனுக்கு ஒரு வார்த்தை.
45.    நல்லவரை நாவில் உரை; பொன்னைக் கல்லில் உரை.
46.    நல்லவன் என்று பெயரெடுக்க நாள் செல்லும்
47.    நல்லவன் உறவை நாலு பணம் கொடுத்துச் சம்பாதிக்கவேண்டும், கெட்டவன் உறவை பத்துப் பணம் கொடுத்து நீக்கவேண்டும்.
48.    நல்லவன் ஒரு நாள் நடுவே நின்றால் அறாத வழக்கும் அறும்.
49.    நல்லது செய்து நடுவழியே போனால் பொல்லாத்து போகிற வழியே போகிறது.
50.    நல்லார் பொல்லாரை நடத்தையால் அறியலாம்.
51.    நல்லாரை நாவழியப் பேசினால் பல்லாலே பதக்குப் புழுச் சொரியும்
52.    நல்லிணக்கம் அல்லது அல்லல்படுத்தும்
53.    நல்லோருக்குப் பெய்யும் மழை எல்லோருக்கும்
54.    நலம் இல்லாத செல்வம் வளமில்லாத வாழ்வு
55.    நன்மை கடைப்பிடி.
56.    நன்றும் தீதும் பிறர் தர வாரா
57.    நன்றே செய், அதுவும் இன்றே செய்
58.    நனைத்துச் சுமக்கலாமா?
59.    நனைந்த கிழவி அடுப்படிக்கு வந்தால் விறகுக்கும் சேதம்

நா‘--- வரிசையில் பழமொழிகள் 
  1. நா அசைய நாடே அசையும்.
  2. நாக்கிலே சனி
  3. நாக்கிலே இருக்குது நன்மையும் தீமையும்.
  4. நாக்கு மேலே பல்லுப் போட்டுப் பேசாதே!
  5. நாட்டாள் பெற்ற குட்டி நாகரிகம் பேசவல்ல குட்டி
  6. நாடறிந்த பார்ப்பனுக்கு பூணூல் அவசியமா?
  7. நாடு ஒன்றி வாழில் கேடு ஒன்றும் இல்லை
  8. நாம் ஒருவருக்கு கொடுத்தால் நமக்கு ஒருவர் கொடுப்பார்
  9. நாமொன்று நினைக்க தெய்வமொன்று நினைக்கும்
  10. நாளை கிடைக்கப்போகும் பலாக்காயைவிட இன்று கிடைத்த கிளாக்காய் போல.
  11. நாய் இருக்கும் இடத்தில் சண்டை இருக்கும்.
  12. நாய் கொண்டு போன பானையை யார் கொண்டு போனால் என்னா?
  13. நாய் சந்தைக்குப் போனது போல
  14. நாய் சமுத்திரம் போனாலும் நக்கித்தான் குடிக்கும்
  15. நாய் சிங்கத்துக்கு பட்டம் கட்டியது போல
  16. நாய் பட்ட பாடு தடி அறியும்
  17. நாய் வாலை நிமிர்த்த முடியுமா?
  18. நாய் வித்த காசு குரைக்காது.
  19. நாய் வேஷம் போட்டா குறைத்துதான் ஆகனும்
  20. நாய்க்கு ஏன் முழுத் தேங்காய், நடு வீட்டில் உருட்டவா?
  21. நாய்க்கு கடிவாளம் போட்டது போல
  22. நாய்க்குத் தெரியுமா கொக்கு பிடிக்க?
  23. நாய்க்குப் பருத்திக் கடையில் என்ன வேலை?
  24. நாய்க்கு வேலையும் இல்லை; நிற்க நேரமும் இல்லை.
  25. நாயும் தன் நிலத்தில் மிடுக்கு
  26. நாயை எதிரே வைத்துக்கொண்டு நாம் சாப்பிடுவது போல்
  27. நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.
  28. நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் விடுவது போல்
  29. நாயைக் கொஞ்சினால் முகத்தை நக்கும்
  30. நாயும் சரி, நாவியும் சரி உனக்கு.
  31. நாலாறு கூடினால் பாலாறு.
  32. நாலு பிள்ளை பெற்றவளுக்கு நடுத்தெருவில் சோறு
  33. நாவடக்கம் கற்றவன் நல்லதனைத்தும் கற்றவன்
  34. நாவெனும் கூரிய வாள்
  35. நாவுக்கு இசைந்தது பாவுக்கு இசையும்
  36. நாழி அரிசி ச் சோறுண்டவன் நமனுக்ஷிகு உயிர் கொடான்
  37. நாழிப் பணம் கொடுத்தாலும் மூளிப்பட்டம் போகாது.
  38. நாள் செய்வது நல்லார் செய்யார்.
  39. நாற்பது வயதில் நாய்க் குணம்
  40. நாறும் மீனை பூனை பார்த்தது போல
  41. நான் பிடித்த முயலுக்கு மூணு கால்.

நி‘--- வரிசையில் பழமொழிகள்
 
  1. நித்தம் போனால் முத்தம் சலிக்கும்
  2. நித்திய கண்டம் பூரண ஆயுசு
  3. நித்தியங் கிடைக்குமா அம்மாவாசை சோறு?
  4. நித்திரை சத்துரு
  5. நித்திரை சுகம் அறியாது
  6. நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும்
  7. நிலவுக்கும் களங்கம் உண்டு
  8. நிழலின் அருமை வெயிலில் தெரியும்
  9. நிழலுடன் துவந்த யுத்தம்
  10. நிறை குடம் தளும்பாது
  11. நிறையக் கேள், குறைவாகப் பேசு!
  12. நின்ற மரம் போனால் நிற்கின்ற மரம் நெடு மரம்
  13. நின்ற வரையில் நெடுஞ்சுவர்; விழுந்த அன்று குட்டிச் சுவர்.
  14. நின்ற வெள்ளத்தை வந்த வெள்ளம் கொண்டு போயிற்று

நீ‘--- வரிசையில் பழமொழிகள்

1.    நீந்த மாட்டாதவனை ஆறு கொண்டு போகும்.
2.    நீர் ஆழம் கண்டாலும் நெஞ்சு ஆழம் காண முடியாது
3.    நீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும்.
4.    நீர் உயர நெல்லும் உயரும்
5.    நீர் என்று நினைத்தது நெருப்பாய் முடிந்தது
6.    நீர் போனால் மீன் துள்ளுமா?
7.    சிர் மேல் எழுத்து போல
8.    நீரில் குமிழி சரீரம்
9.    நீரிலும் நெருப்பிலும் நுழைவது
10.    நீரும் கொல்லும்; நெருப்பும் கொல்லும்.
11.    நீலிக்கு கண்ணீர் இமையிலே!
12.    நீள நீளத் தெரியும் மெய்யும் பொய்யும்.

நு‘--- வரிசையில் பழமொழிகள்

1.    நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக!
2.    நுணலும் தன் வாயால் கெடும்
3.    நுனிக் கொம்பில் ஏறி அடிக் கொம்பை வெட்டுவதா?

நூ‘ ---வரிசையில் பழமொழிகள்

1.    நூல் இல்லாமல் மாலை தொடுப்பது
2.    நூல் கற்றவனே மேலவன்
3.    நூலளவேயாகும் நுண்ணறிவு
4.    நூற்றுக்கு மேல் ஊற்று; ஆயிரத்துக்கு மேல் ஆற்றுப்பெருக்கு.
5.    நூற்றைக் கொடுத்தது குறுணி.

நெ‘ --- வரிசையில் பழமொழிகள்

1.    நெடியாரைக் குறியாரை ஆற்றில் அறியலாம்
2.    நெய் முந்தியோ? திரி முந்தியோ?
3.    நெய்க் குடத்தை எறும்பு மொய்த்ததைப் போல
4.    நெய்கின்றவனுக்கு ஏன் குரங்குக் குட்டி?
5.    நெருஞ்சி முள் தைத்தாலும் இருந்து பிடுங்க வேண்டும்
6.    நெருப்பை கண்டு மிதித்தாலும் சுடும்; காணாமல் மிதித்தாலும் சுடும்.
7.    நெருப்பைச் சிறியது என்று முந்தானையில் முடியலாமா?
8.    நெருப்பில்லாமல் புகையுமா?
9.    நெருப்பின் அருமை குளிரில் தெரியும்; செருப்பின் அருமை வெயிலில் தெரியும்.
10.    நெருப்பு என்றால் வாய் வெந்து போகுமா?
11.    நெருப்பு நெருப்பை அணைக்கும்
12.    நெருப்புப் பந்தலில் மெழுகு பொம்மை ஆடுமா?
13.    நெருப்பும் அரசனும் நெருங்காதவரை நண்பர்கள்
14.    நெல்லுக்குப் பாயும் நீர் புல்லுக்கும் பாயும்

நே‘ --- வரிசையில் பழமொழிகள்

1.    நேற்று உள்ளார் இன்று இல்லை
2.    நேர்மையான முகமே உண்மையான சிபாரிசு
3.    நேரம் சரியில்லை என்றால் பருகும் நீரே எமனாகும்
4.    நேருக்கு நேர் போராடு

நை‘ --- வரிசையில் பழமொழிகள்

1.    நைடதம் புலவர்க்கு ஔடதம்.

நொ‘ --- வரிசையில் பழமொழிகள்

1.    நொடியில் தந்தவன் இருமுறை தந்தவன்
2.    நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு.
3.    நொறுங்கத் தின்றால் நூறு வயசு

நோ‘ --- வரிசையில் பழமொழிகள்

1.    நோகாமல் அடிக்கிறேன்; ஓயாமல் அழு.
2.    நோய் ஒரு பக்கம் இருக்க சூடு ஒரு பக்கம் போட.
3.    நோய் கொண்டார் பேய் கொண்டார்.
4.    நோய்க்கு இடம் கொடேல்.
5.    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
6.    நோயாளிக்கு ஆசை காட்டியது போல
7.    நித்திரை சுகம் அறியாது

‘த‘---‘தௌ‘ வரிசையில் பழமொழிகள்

‘த‘---வரிசையில் பழமொழிகள்

1.    தகப்பன் வெட்டின கிணறு என்று தலை கீழாக விழலாமா?
2.    தகப்பனுக்கு கட்ட கோவணம் இல்லையாம்; மகன் தஞாவூர் வரைக்கும் நிலப் பாவாடை போடச் சொன்னானாம்.
3.    தங்கத்திலே புரண்டாலும் கழுதை கழுதைதான்!
4.    தங்கம் தரையிலே; தவிடு பானையிலே.
5.    தங்கமானாலும் விலங்கு விலங்குதானே!
6.    தங்க முடி சூட்டினாலும் தங்கள் குணம் விடார் கஞ்சர்
7.    தஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் ஆகாது.
8.    தட்டான் தாய்ப் பொன்னிலும் மாப்பொன் களவெடுப்பான்
9.    தட்டிப் பேசுவார் இல்லேன்னா தம்பி சண்ட பிரசண்டன்
10.    தடவிப் பிடிக்க மயிர் இல்லை, பெயர் மட்டும் சவுரிப்பெருமாள்.
11.    தடி எடுத்தவன் தண்டல்காரன்
12.    தடிக்கு மிகுந்த மிடாவா?
13.    தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும்.
14.    தண்ணீரில் விளைந்த உப்பு தண்ணீரிலேயே கரையும்
15.    தண்ணீரும் மூன்று பிழை பொறுக்கும்
16.    தண்ணீரைக்கூட ஜல்லடையில் வாரலாம், அது உறையும்வரை பொறுத்திருந்தால்.
17.    தண்ணீரையும் தாயையும் பழிக்காதே!
18.    தணிந்த வில்தான் தைக்கும்
19.    தந்தை தாய் பேண்.
20.    தந்தை எவ்வழி தனயன் அவ்வழி.
21.    தம்பியுடையான் படைக்கஞ்சான்.
22.    தயங்கி நிற்பவன் தோற்று நிற்பான்
23.    தயிருக்குச் சட்டி ஆதாரம்; சட்டிக்குத் தயிர் ஆதாரம்.
24.    தருமத்தைப் பாவம் வெல்லாது
25.    தருமம் தலை காக்கும்
26.    தலை இருக்க வால் ஆடலாமா?
27.    தலை எழுத்தைத் தந்திரத்தால் வெல்ல முடியுமா?
28.    தலை கீழாக இருந்து தபசு செய்தாலும் கூடுகிற காலம் வந்துதான் கூட வேண்டும்
29.    தலை சொறியக் கொள்ளி தானே தேடிக்கொண்டாய்
30.    தலைக்குத் தலை நாயகம்
31.    தலைக்கு மேலே வெள்ளம் ஜாண் போனா என்ன? முழம் போனா என்ன?
32.    தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு
33.    தலையை தடவி மூளையை உரிவான்
34.    தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்
35.    தலைவலியும் திருகு வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்
36.    தலைவன் மயக்கம் அனைவர் மயக்கம்
37.    தவத்துக்கு ஒருவர்; கல்விக்கு இருவர்.
38.    தவளை தன் வாயால் கெடும்
39.    தழைத்த மரத்துக்கு நிழல் உண்டு; பிள்ளை பெற்றவளுக்குப் பால் உண்டு.
40.    தவறுக்கு வருந்து; தவறே செய்யாமல் இருப்பது அருமருந்து.
41.    தவறே செய்யாதவன் எதுவுமே செய்யாதவன்
42.    தவிட்டுக்கு வந்த கை தனத்துக்கும் வரும்
43.    தவிட்டை நம்பிப் போக சம்பா அரிசியை நாய் கொண்டு போச்சாம்.
44.    தன் உயிர் போல் மன்னுயிர்க்கு இரங்கு
45.    தன் ஊரில் பேச்சு, பிற ஊரில் ஏச்சு.
46.    தன் ஊருக்கு அன்னம்; அயல் ஊருக்கு காகம்.
47.    தன் ஊருக்கு யானை; அயல் ஊருக்குப் பூனை.
48.    தன் கையே தனக்கு உதவி
49.    தன் குற்றம் இருக்கப் பிறர் குற்றம் பார்ப்பானேன்?
50.    தன் நிலத்தில் குறு முயல் தந்தியிலும் வலியது
51.    தன் பலம் கொண்டு அம்பலம் ஏற வேண்டும்
52.    தன் வாயாலே தான் கெட்டான்
53.    தன் வினை தன்னைச் சுடும், ஓட்டப்பம் வீட்டை சுடும்.
54.    தன் வீட்டுக் கடவைப் பிடுங்கி அடுத்த வீட்டுக்கு வைத்தது போல
55.    தன் வீட்டு விளக்கென்று முத்தமிட்டால் சுடாதோ?
56.    தன்னைக் கொல்ல வரும் பசுவையும் கொல்லலாம்
57.    தன்னையே மறப்பவன் உண்மையில் முட்டாள்
58.    தனக்கு அழகு மொட்டை; பிறர்க்கு அழகு கொண்டை.
59.    தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, எதிரிக்கு இரண்டு கண்ணும் போக வேண்டும்.
60.    தனக்கு தனக்குன்னா, தாச்சீல பதக்கு கொள்ளும்
61.    தனக்கு மிஞ்சித்தான் தானமும் தர்மமும்
62.    தனக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை, எதிரிக்கு சகுனப் பிழை செய்ய வேண்டும்.
63.    தனி மரம் தோப்பாகாது

தா‘---வரிசையில் பழமொழிகள்

64.    தாடி எரியும்போது பீடிக்கு நெருப்பு கேட்பது
65.    தாடிக்கு பூச்சுற்றலாமா?
66.    தாம்பும் அறுதல், தோண்டியும் ஓட்டை.
67.    தாமதமானாலும் பரவாயில்லை, நாமாக தவிர்க்காதவரை
68.    தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும்
69.    தாய் சொல் கேளாத பிள்ளை, நாய் வாயில் சேலை.
70.    தாய் தூற்றினால் ஊர் தூற்றும்
71.    தாய் முகம் காணாத பிள்ளையும், மழை முகம் காணாத பயிரும் உருப்படாது.
72.    தாய்க்குச் சோறு போடுவது ஊருக்குப் புகழ்ச்சியா?
73.    தாய்க்குப் பின் தாரம்
74.    தாய்ப் பாலுக்கு கணக்குப் பார்த்தால் தாலி மிஞ்சுமா?
75.    தாயிற்சிறந்த கோயிலுமில்லை; தந்தை சொல்மிக்க மந்திரமில்லை.
76.    தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறு.
77.    தாயைப் பார்த்து மகளைக் கொள்.
78.    தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை
79.    தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும்
80.    தான் கள்வன், பிறரை நம்பான்.
81.    தான் தின்னி பிள்ளை வளர்க்காள்; தவிடு தின்னி கோழி வளர்க்காள்.
82.    தான் தேடாப் பொன்னுக்கு மாற்றுரை இல்லை.
83.    தானம் கொடுத்த மாட்டை பல்லை பிடித்து பார்த்தானாம்   
84.    தானாகப் பழுக்காத பழத்தை தடி கொண்டு அடித்தால் பழுக்குமா?
85.    தானாக வந்த சீதேவியை காலால் எட்டி உதைத்தானாம்.
86.    தானிக்கும் தீனிக்கும் சரி
87.    தானும் உண்ணான், பிறருக்கும் கொடான்.
88.    தானும் படுக்க மாட்டான், தள்ளியும் படுக்க மாட்டான்.

தி‘---வரிசையில் பழமொழிகள்

89.    திக்கற்றவனுக்கு தெய்வமே துணை.
90.    திரள் எலி வளை எடாது
91.    திரிசங்கு சொர்க்கம்
92.    திருட்டு நாய்க்குச் சலங்கை கட்டினாற்போல
93.    திருடனுக்குத் தய்வமே சாட்சி
94.    திருடிக்குத் தெய்வம் இல்லை; அபசாரிக்கு ஆணை இல்லை.
95.    திருநெல்வேலிக்கே அல்வாவா?
96.    திருவாக்குக்கு எதிர்வாக்குக்கு உண்டா?
97.    திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன
98.    திறந்த கதவு துறவியையும் திருடன் ஆக்கும்
99.    திறந்த வீட்டில் நாய் நுழைந்தாற்போல்
1.    தின்ற நஞ்சு கொல்லும், தின்னாத நஞ்சு கொல்லுமா?
2.    தின்ற மண்ணுக்குத் தகுந்த சோகை.
3.    தினவுக்கு சொரிதல் இதம்
4.    தினை விதைத்தவன் தினை அறுப்பான்

தீ‘---வரிசையில் பழமொழிகள்

5.    தீ வினை செய்யில் பேய் வினை செய்யும்
6.    தீக்குக் காற்று உதவியது போல
7.    தீட்டின மரத்திலேயே பதம் பார்த்தது போல்
8.    தீயோர் பொறை, நல்லோர் துயர்
9.    தீரா வழக்குக்கு தெய்வமே துணை.
10.    தீராக் கோபம் பாடாய் முடியும்

 து‘---வரிசையில் பழமொழிகள்

11.    துட்டு வந்து போட்டியிலே விழுந்ததோ, திட்டு வந்து பொடியிலே விழுந்ததோ?
12.    துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால்
13.    துணிந்தவனுக்கு துக்கம் இல்லை; அழுதவனுக்கு அகங்காரம் இல்லை.
14.    துணிவால் சாதிக்க முடியாத்தை பணிவால் சாதிக்கலாம்
15.    துணிவே துணை
16.    துணையாகப் போனாலும் பிணையாகப் போகாதே!
17.    துப்பாக்கி முனையில் சமாதானம்
18.    துரும்பு தூண் ஆனால், தூண் என்ன ஆகும்?
19.    துரும்பு தூணைத் தாங்குமா?
20.    துலுக்கர் தெருவில் திருவெம்பாவையா?
21.    துழாவி காய்ச்சாதது கஞ்சியுமல்ல; வினாவிக் கட்டாதது கல்யாணமுமல்ல.
22.    துள்ளாதே துள்ளாதே ஆட்டுக்குட்டி; என் கையில் இருக்குது பீச்சாங்கத்தி.
23.    துள்ளுற மாடு பொதி சுமக்காது.
24.    துள்ளும் மான் துள்ளித் துரவில் விழுந்தது
25.    துறவிக்கு வேந்தன் துரும்பு
26.    துன்பமே மனிதனின் உரை கல்
27.    துஷ்டப் பிள்ளைக்கு ஊர் புத்திமதி சொல்லும்
28.    துஷ்டனைக் கண்டால் தூர விலகு

 தூ‘---வரிசையில் பழமொழிகள்

29.    தூக்குனங்குருவி குரங்குக்கு புத்தி சொன்னது போல
30.    தூங்குறவனை எழுப்பலாம், தூங்குற மாதிரி நடிக்கிறவனை எழுப்ப முடியுமா?
31.    தூங்கும் சிங்கத்தை சீண்டாதே!
32.    தூர்ந்த கிணற்றைத் தூர் வாராதே!
33.    தூரத்துத் தண்ணீர் ஆபத்துக்கு உதவாது
34.    தூரத்துப் பச்சை கண்ணுக்கு குளிர்ச்சி.
35.    தூரப் போக வேண்டுமோ கீரைப் பாத்தியிலே கையை வைக்க.

 தெ‘---வரிசையில் பழமொழிகள்

36.    தெய்வம் கொடுத்தாலும் பூசாரி விட மாட்டான்
37.    தெரிந்த எதிரி தெரியாத நண்பனைவிட மேல்
38.    தெற்கே அடித்த காற்று திருப்பி அடிக்காதோ?
39.    தென்றல் முத்தி பெருங்காத்தாச்சு
40.    தென்னை மரத்தில் தேள் கொட்ட பனை மரத்தில் நெறி கட்டியது

 தே‘---வரிசையில் பழமொழிகள்

41.    தேசங்கள்தோறும் பாஷைகள் வெவ்வேறு
42.    தேடாது அழிக்கின் பாடாய் முடியும்.
43.    தேடித் தின்றவர் தெய்வத்துக்கு ஒப்பானவர்
44.    தேடிய மூலிகை காலில் பட்டது போல
45.    தேய்ந்தாலும் சந்தனக் கட்டையின் மணம் போகுமா?
46.    தேரோட போச்சு திருநாளு, தாயோட போச்சு பிறந்த வீடு
47.    தேள் நெருப்பில் விழுந்தால் எடுத்து விட்டவனைக் கொட்டும்
48.    தேன் எடுத்தவன் புறங்கையை நக்குவான்
49.    தேன் உண்டானால் ஈ தேடி வரும்
50.    தேன் ஒழுகப் பேசுவான்
51.    தேனும் தினை மாவும் தெய்வத்துக்கு அர்ப்பணம்

 தொ‘---வரிசையில் பழமொழிகள்

52.    தொட்டில் பழக்கம் சுடு காடு மட்டும்
53.    தொட்டில் பிள்ளைக்கு நடக்குற பிள்ளை நமன்
54.    தொட்டிக் காட்டாத வித்தை சுட்டுப் போட்டாலும் வராது.
55.    தொண்டைக்கு கீழே போனால் நரகம்
56.    தொன்மை நாடி, நன்மை விடாதே.

தோ‘---வரிசையில் பழமொழிகள்

57.    தோணி போனாலும் துறை நிக்கும்
58.    தோல் இருக்கச் சுவை விழுங்கு
59.    தோல்வியே வெற்றிக்கு அறிகுறி
60.    தோளில் இருந்து செவியைக் கடிப்பான்
61.    தோற்றம் ஏமாற்றம்   

‘ஞ‘ --- வரிசையில் பழமொழிகள்

1. ஞானம் எல்லம் ஒரு மூட்டை; உலகம் ஒரு கோட்டை.

‘ச‘ - 'சோ' --- வரிசையில் பழமொழிகள்

ச‘ ---  வரிசையில் பழமொழிகள்

1.    சங்கு ஆயிரம்கொண்டு வங்காளம் போனாலும் தன் பாவம் தன்னோடு.
2.    சட்டி சுட்டது, கையை விட்டது.
3.    சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்
4.    சட்டியில் உள்ளது அகப்பையில் வரும்
5.    சண்ட மாருதத்துக்கு எதிப்பட்ட சருகு
6.    சண்டிக் குதிரை, நொண்டி சாரதி.
7.    சண்டிக் குதிரைக்கு சறுக்கினது சாக்கு.
8.    சத்தியம் வெல்லும்; அசத்தியம் கொல்லும்.
9.    சதை உள்ள இடத்தில கத்தி நாடும்
10.    சந்தியில் அடித்ததற்கு சாட்சி வேறா?
11.    சந்திரன் சண்டாளன் வீட்டிலும் பிரகாசிக்கிறான்.
12.    சந்தேகம் தீரா வியாதி
13.    சந்நியாசி கோவணத்துக்கு இச்சித்து சம்சாரம் மேலிட்டது.
14.    சந்நியாசிக்கும் பழைய குணம் போகாது
15.    சபையிலே நக்கீரன், அரசிலே விற்சேரன்.
16.    சம்பளம் இல்லாத சேவகனும், கோபமில்லாத எசமானனும்.
17.    சர்க்கரை என்று சொன்னால் தித்திக்குமா?
18.    சர்க்கரை தின்று பித்தம் போனால் கழிப்பு மருந்து ஏன் தின்ன வேண்டும்?
19.    சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பெய்தது போல
20.    சரக்கு மலிந்தால் சந்தைக்கு வரும்
21.    சருகைக் கண்டு தணல் அஞ்சுமா?
22.    சளிப் பிடித்ததோ சனிப் பிடித்ததோ?

சா‘ ---  வரிசையில் பழமொழிகள்

23.    சாக்கடையில் கல்லை விடு எறிந்தால் நம் மீதுதான் தெறிக்கும்.
24.    சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் மட்டம்
25.    சாகிறவரைக்கும் சங்கடமானால் வாழ்வது எக்காலம்.
26.    சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல்.
27.    சாட்டை இல்லா பம்பரம் ஆட்டிவைக்க வல்லது.
28.    சாண் ஏறினால் முழம் சறுக்கும்
29.    சாண் பாம்பானாலும் முழத்தடி வேணும்
30.    சாணம் ஒரு கூடை, ஜவ்வாது பணவிடை.
31.    சாத்தான் வேதம் ஓதுகிறதாம்
32.    சாதம் சிந்தினால் பொறுக்கலாம்; நீர் சிந்தினால்?
33.    சாது மிரண்டா காடு கொள்ளாது
34.    சாதுரியப்பூனை மீன் இருக்க, புளியங்காயத் திங்கிறதாம்.
35.    சாற்றுக்கு இல்லாத பூசனிக்காய் பந்தலில் ஆடுது

சி‘ ---  வரிசையில் பழமொழிகள்

36.    சித்தன் போக்கு சிவன் போக்கு.
37.    சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்
38.    சிம்பிலே வலையாதது தடியிலே வளையுமா?
39.    சிரிக்கும் முகத்தில் சீற்றம் ஒளிந்திருக்கும்
40.    சிரித்தால் கூலி; சேவித்தால் சம்பளம்.
41.    சிரு துளி பெரு வெள்ளம்
42.    சிவ பூஜையில் கரடி
43.    சிற்றுணர்வோர் என்றும் சிலுசிலுப்பர்
44.    சிறியார்க்கு இனியது காட்டாதே! சேம்புக்குப் புளிவிட்டு காய்ச்சாதே!
45.    சிறு குழந்தை இல்லாத வீடும் வீடல்ல; சீரகம் இடாத கறியும் கறியல்ல.
46.    சிறு துரும்பும் பல் குத்த உதவும்
47.    சிறு மழை பெரும்புழுதியைத் தணிக்கும்
48.    சிறு மீன் எல்லாம் பெரு மீனுக்கு இரை.
49.    சிறுகக் கட்டி பெருக வாழ்!
50.    சிறுக சிறுகத் தின்றால் மலையையும் தின்னலாம்.
51.    சிறுமையில் கல்வி சிலைமேல் எழுத்து.
52.    சின்ன மீனைப் போட்டு பெரிய மீனை பிடி
53.    சினத்தறுத்த மூக்கு சிரித்தொட்ட ஒட்டுமோ?

 சீ‘ ---  வரிசையில் பழமொழிகள்

54.    சீக்கிர புத்தி பலவீனம்
55.    சீதை பிறக்கவும் இலங்கை அழியவும்
56.    சீலை இல்லை என்று சித்தி வீட்டுக்கு போனாளாம், அவள் ஈச்சம் பாயை கட்டிக்கொண்டு எதிரே வந்தாளாம்.
57.    சீரியர் கெட்டாலும் சீரியரே!
58.    சீவன் போனால் கீர்த்தியும் போகுமோ?
59.    சீனி என்று எழுதி நக்கினால் இனிக்குமா?

 சு‘ ---  வரிசையில் பழமொழிகள்

60.    சுக்கு அறியாத கஷாயம் உண்டோ?
61.    சுகத்துக்குப்பின் துக்கம்.
62.    சுக துக்கம் சுழல் சக்கரம்
63.    சுங்கமும் கூழும் இருக்கத் தடிக்கும்
64.    சுட்ட சட்டி சுவை அறியுமா?
65.    சுட்ட மண்ணும், பச்சை மண்ணும் ஒட்டுமா?
66.    சுட்டாலும் செம்பொன் தன்னொலி கெடாது.
67.    சுடர் விளக்கானாலும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்.
68.    சுடலை ஞானம்
69.    சுண்டக்காய் கால் பணம், சுமைக்கூலி முக்கால் பணம்.
70.    சுத்த வீரனுக்கு உயிர் துரும்பு.
71.    சுத்தம் சோறு போடும், எச்சில் இரக்க வைக்கும்.
72.    சுடும்வரை நெருப்பு, சுற்றும்வரை பூமி, போராடும்வரை மனிதன்.
73.    சும்மா இருக்கிற தம்பிரானுக்கு இரண்டு பட்டை.
74.    சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி.
75.    சுய புத்தி போனாலும் சொல் புத்தி வேண்டாமா?
76.    சுரை இட பாகல் முலைக்குமா?
77.    சுவத்து மேலெ எறிஞ்ச பந்து திரும்ப வந்துதானே ஆக வேண்டும்
78.    சுவர் இருந்தால் சித்திரம் எழுதலாம்.
79.    சுவையான உணவு விரைவாகத் தீரும்
80.    சுற்றத் துணியுமில்லை, நக்கத் தவிடுமில்லை.

 சூ‘ ---  வரிசையில் பழமொழிகள்

81.    சூடு கண்ட பூனை அடுப்பங்கரையில் சேராது.
82.    சூரியனை கையால் மறைத்தது போல
83.    சூரியனைக் கண்ட பனி போல
84.    சூரியனைப் பார்த்து நாய் குரைத்ததாம்.

செ‘ ---  வரிசையில் பழமொழிகள்

85.    செக்களவு பொன் இருந்தாலும் செதுக்கியுண்டால் எத்தனை நாளைக்கு வரும்?
86.    செட்டிக்கு வெள்ளாமை ஜென்மப்பகை.
87.    செட்டிச்சி சிங்காரிக்குமுன் பட்டணம் ப்றிபோயிடும்
88.    செடியில் வணங்காததா மரத்தில் வணங்கும்?
89.    செத்த பாம்பை அடி
90.    செத்தவன் உடைமை இருந்தவனுக்கு அடைக்கலம்.
91.    செம்பு நடமாடினால் குயவன் குடி போய்விடும்.
92.    செய்த வினை செய்தவருக்கு எய்திடும்
93.    செய்யும் தொழில்களில் எல்லாம் நெய்யும் தொழிலுக்கு நிகர் ஏதுமில்லை
94.    செருப்பால் அடித்துக் குடையும், குதிரையும் கொடுப்பது.
95.    செருப்பின் அருமை வெயிலில் தெரியும்; நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.
96.    செருப்புக்காக காலை செதுக்குவார்களா?
97.    செய்வன திருந்த செய்
98.    செல்லும் இடமெல்லம் கற்றவனுக்கு சிறப்பு.
99.    செல்வம் செருக்குது, வாசல் படி வழுக்குது.1.    செல்லும் செல்லாததுக்கும் செட்டியார் இருக்கிறார்.
2.    செல்வன் சொல்லுக்கு அஞ்சான்; வீரன் போருக்கு அஞ்சான்.
3.    செலவில்லாச் செலவு வந்தால் களவில்லாக் களவு வரும்.

சே‘ ---  வரிசையில் பழமொழிகள் 

4.    சேத நினைவுக்கு பூதம் சிரிக்கும்
5.    சேற்றில் புதைந்த யானையை காக்கையும் கொத்தும்
6.    சேற்றிலே செந்தாமரை
7.    சேற்றிலே நட்டு வைத்த கம்பம் போல
8.    சேராத இடம் சேர்ந்தால் துன்பம் வரும்

 சை‘ ---  வரிசையில் பழமொழிகள்

9.    சைகை அறியாதவன் சற்றும் அறியான்.

சொ‘ ---  வரிசையில் பழமொழிகள் 

10.    சொப்பனங்கண்ட அரிசி சோற்றுக்காகுமா?
11.    சொர்க்கத்துக்குப் போகும்போது கக்கத்தில் ராட்டினம் எதுக்கு?
12.    சொல் அம்போ வில் அம்போ?
13.    சொல் கேளாப் பிள்ளையால் குலத்துக்கீனம்.
14.    சொல் வல்லவனை வெல்வது அரிது
15.    சொல் வேறு; செயல் வேறு.
16.    சொல்கிறவனுக்கு வாய்ச்சொல்; செய்கிறவனுக்கு தலைச்சுமை.
17.    சொல்லிச் செய்வர் நல்லோர், சொல்லாமல் செய்வோர் பெரியோர்.
18.    சொல்லிப் போக வேண்டும் சுகத்துக்கு; சொல்லாமல் போக வேண்டும் துக்கத்துக்கு.
19.    சொல்லியும் செய்யார் அசடர்
20.    சொல்லினும் செயல் உத்தமம்
21.    சொல்வது சுலபம், செய்வது கடினம்
22.    சொல்வார் சொன்னால் கேட்பாருக்குப் புத்தி எங்கே போச்சு?
23.    சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை
24.    சொன்னால் வெட்கம், சொல்லாவிட்டால் துக்கம்.

 சோ‘ ---  வரிசையில் பழமொழிகள்

25.    சோம்பல் சோறின்மைக்குப் பிதா.
26.    சோம்பித் த்ரியாதே!
27.    சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோட.
28.    சோம்பேறியின் நாக்கு சோம்பி இருப்பதேயில்லை
29.    சோழியன் குடுமி சும்மா ஆடாது
30.    சோற்றுக்கு கேடு, பூமிக்கு பாரம்

ஜெ‘ ---  வரிசையில் பழமொழிகள் 

31.    ஜென்மக் குருடனுக்கு கண் கிடைத்தாற்போல

‘க‘ --- ‘கௌ‘ வரிசையில் பழமொழிகள்

‘க‘ ---  வரிசையில் பழமொழிகள்
1.    கங்கையில் படிந்தாலும் பேய்ச் சுரைக்காய் நல்ல சுரைக்காய் ஆகாது.
2.    கங்கையில் முழுகினாலும் காக்கை அன்னம் ஆகுமா?
3.    கசப்பை அறியான் இனிப்பை அறியான்
4.    கஞ்சி கண்ட இடம் கைலாசம், சோறு கண்ட இடம் சொர்க்கம்
5.    கட்டக் கரிய இல்லாமல் போனாலும் பேரு பொன்னம்மாள்.
6.    கட்டக் கருத்த பாசிக்கு வழி இல்லையாம், பேரு மட்டும் முத்துமாலை.
7.    கட்டிக்கொடுத்த சோறும் சொல்லிக்கொடுத்த பாடமும் எத்தனை நாள் வரும்?
8.    கட்டி வைத்த பணத்தைத் தட்டிப் பறித்தார்போல.
9.    கட்டின வீட்டுக்கு எட்டு வக்கனை.
10.    கட்டினவனுக்கு ஒரு வீடு; கட்டாதவனுக்கு பல வீடு.
11.    கடக்க வழியறியாதவனுக்கு நடு வீடு காத வழி
12.    கடப்பாறையை எடுத்து பல் குத்துவது போல
13.    கடவுளை நம்பினோர் கைவிடப்படார்
14.    கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?
15.    கடல் திடலாகும்; திடல் கடலாகும்.
16.    கடல் பெருகி மேலிட்டால் கரை ஏது?
17.    கடல் மீனுக்கு நீச்சல் பழகனுமா?
18.    கடல் மீனுக்கு நுழையன் இட்டதே பெயர்
19.    கடல் வற்றி கருவாடு தின்னலாம் என்று உடல் வற்றிச் செத்ததாம் கொக்கு.
20.    கடலில் பெருங்காயத்தை கரைத்தது போல
21.    கடலில் மூழ்குபவரைவிடக் கள்ளில் மூழ்குபவர் அதிகம்
22.    கடலுக்கு கரை போடுவார் உண்டோ?
23.    கடலைத் தாண்ட ஆசை உண்டு, கால்வாயைத் தாண்ட கால்கள் இல்லை.
24.    கடன்காரனை ஏற்றக் கழுவுண்டா?
25.    கடன் வாங்கி கடன் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறி கை விட்டவனும் கெட்டான்.
26.    கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி.
27.    கடன் வாங்கினவன் மறந்தாலும் கடன் கொடுத்தவன் மறக்க மாட்டான்
28.    கடனில்லாக் கஞ்சி கால் வயிறு
29.    கடா பின்வாங்குவது பாய்வதற்கே!
30.    கடிக்கிற நாய் குறைக்காது
31.    கடி கோலில் கட்டிய நாய்
32.    கடிந்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை
33.    கடுகத்தனை நெருப்பும் போர கொழுத்திவிடும்.
34.    கடுகு களவும் களவுதான், கற்பூரம் களவும் களவு தான்.
35.    கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது
36.    கடுகு போன இடம் தேடுவார், பூசனிக்காய் போன இடம் தெரியாது
37.    கடுங்காற்று மழையைக் கூட்டும். கடுஞ்சினேகம் பகை கூட்டும்.
38.    கடுஞ்சொல் தயவைக் கெடுக்கும்.
39.    கடும் வியாதிக்கு கடும் மருந்து
40.    கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்ததுபோல
41.    கடைந்த மோரில் வெண்ணெய் எடுப்பது
42.    கண் கண்டது கை செய்யும்
43.    கண் குருடானாலும் நித்திரை குறையுமா?
44.    கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம்
45.    கண் மண் தெரியாத காதல்
46.    கண்ட பாவனையில் கொண்டையை முடி
47.    கண்டது கேட்டது சொல்லாதே!
48.    கண்டது சொன்னால் கொண்டிடும் பகை
49.    கண்டது பாம்பு; கடித்தது கருக்கு மட்டை.
50.    கண்டது காட்சி; பெற்றது பேறு.
51.    கண்டதே காட்சி; கொண்டதே கோலம்.
52.    கண்டால் அச்சம், காணாவிட்டால் வெறுப்பு
53.    கண்டால் ஒரு பேச்சு; காணாவிட்டால் ஒரு பேச்சு.
54.    கண்டால் காமாச்சி நாயகர், காணவிட்டால் காமாட்டி நாயகர்.
55.    கண்டால் தெரியாதா கம்பளி ஆட்டு மயிர்?
56.    கண்டும் காணவில்லை, கேட்டும் கேட்கவில்லை.
57.    கண்ணாடிக்குள் கண்ட பண முடிச்சுப்போல்
58.    கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல் எறிவதா?
59.    கண்ணான பேரைப் புண்ணாக்கலாமா?
60.    கண்ணில் பட்டால் கரிக்குமா? புருவத்தில் பட்டால் கரிக்குமா?
61.    கண்ணில் எண்ணெய் கரிக்கும்; பிடரியில் எண்ணெய் கரிக்குமா?
62.    கண்ணிலிருந்து மறைந்தால் மனதிலிருந்து மறைவாய்
63.    கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ?
64.    கண்ணிலே மண்ணைத் தூவு
65.    கண்ணுக்குள் சம்மணங்கொட்டுவாள்.
66.    கண்ணு சிறுசு, காண்பதெல்லாம் பெரிசு
67.    கண்ணை இமை காப்பதுபோல்
68.    கண்ணைக் கெடுத்த தெய்வம் புத்தியைக் கொடுக்கும்.
69.    கணக்கன் கணக்கறிவான்; தன் கணக்கைத் தான் அறியான்.
70.    கணக்கன் கணக்கைத் தின்னாவிடில் கணக்கனைக் கணக்குத் தின்று விடும்.
71.    கணக்குப் பார்த்தால் பிணக்கு வரும்
72.    கத்தரிக்காய்க்கு கையும் காலும் முளைத்தது போல
73.    கத்தி எடுத்தவன் கத்தியாலேயே சாவான்
74.    கத்தி முனையில் காதலா?
75.    கத்தி பொன் என்று வயிற்றில் குத்துவதா?
76.    கதிரவன் சிலரைக் காயேன் என்குமா?
77.    கதிரைக் களைந்தும் களையைப் பிடுங்கு
78.    கதைக்குக் காலும் இல்லை, தலையும் இல்லை.
79.    கந்தையானாலும் கசக்கிக் கட்டு
80.    கப்பல்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி; கப்பல் கவிழ்ந்தால் பிச்சைக்காரி.
81.    கப்பல்காரன் வாழ்வு காற்றடித்தால் போச்சு.
82.    கப்பல் ஏரி பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும்?
83.    கப்பல் விட்டு கெட்ட குடி கொட்டை நூற்றால் ஆகுமா?
84.    கம்பத்தில் அஞ்சு ஆனை கட்டுவாள்
85.    கம்பத்தில் ஏறி கரணம் போட்டாலும் கீழே இறங்கி கையேந்த வேண்டும்
86.    கம்பளிமேல் பிசின் போல
87.    கம்பளி விற்ற காசுக்கு மயிர் முளைக்காது
88.    கம்மாலையின் நாய் சம்மட்டி தொனிக்கு அஞ்சுமா?
89.    கமரிலே பால் ஊற்றியதுபோல்
90.    கயிற்றைப் பாம்பெனக் கலங்குவது
91.    கயிறு இல்லாத பம்பரம்போல்
92.    கரணம் தப்பினால் மரணம்
93.    கரி விற்ற பணம் கருப்பாய் இருக்குமா?
94.    கருப்பட்டியிலும் கல் இருக்கும்
95.    கருப்பு வெளுப்பாகாது; கசப்பு இனிப்பாகாது.
96.    கரும்பு இனிது என்று வேரோடு தின்னலாமா?
97.    கரும்பு கசப்பது வாயின் குற்றம்.
98.    கரும்பு கட்டால் கழுதையை அடித்தால் கழுதை அறியுமோ கரும்பு ருசி?
99.    கரும்பு கட்டோடு இருக்க எறும்புதானே வரும்?
1.    கரும்பு தின்னக் கூலியா?
2.    கரும்பு வேம்பாச்சு
3.    கரும்புக்கு உழுத புழுதி காய்ச்சிய பாலுக்குச் சர்க்கரை ஆகுமா?
4.    கருமத்தை முடிப்பவன் கட்டத்தைப் பாரான்
5.    கருமத்தை முடிப்பவன் கடலை ஆராய்வான்
6.    கரை காணாத தோணி.
7.    கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்
8.    கல்யாண வீடு கண்டதும் இல்லை; கொட்டுச் சத்தம் கேட்டதும் இல்லை.
9.    கல்லடிச் சித்தன் போன வழி, காடுமேடெல்லாம் தவிடுபொடி.
10.    கல்லாடம் படித்தவனோடு மல்லாடாதே
11.    கல்லாதவரே கண் இல்லாதவர்.
12.    கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நன்று
13.    கல்லிலே நார் உரிப்பது
14.    கல்லுளிமங்கனுக்கு காடுமேடெல்லாம் தவிடுபொடி
15.    கல்லைக்கூடக் கரைக்கலாம் மனதைக் கரைக்கக் கூடாது.
16.    கல்வி அழகே அழகு.
17.    கல்வி இல்லா செல்வம் கற்பில்லா அழகு.
18.    கல்வி கரை இல, கற்பவர் நாள் சில
19.    கல்விக்கு அழகு கசடற மொழிதல்.
20.    கல்விக்கு இருவர்; களவுக்கு ஒருவர்.
21.    கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்
22.    கலத்திலே சோற்றைப் போட்டு கையைப் பிசைவது போல
23.    கவலை உடையோருக்கு கண்ணுறக்கம் ஏது?
24.    கழுத்து வரை கடன்
25.    கழுதை குதிரை ஆகுமோ? குதிரை கழுதை ஆகுமோ?
26.    கழுதை தேய்ந்து கட்டெறும்பானது
27.    கழுதை மேல் ஏறினால் சுகம் இல்லை.
28.    கழுதைப் புண்ணுக்கு புழுதி மருந்து
29.    கழுதை விட்டை ஆனாலும் கை நிறைய வேண்டும்
30.    கழுதையைக் கட்டி ஓமம் வளர்த்த கதை
31.    கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?
32.    கழுவிக் கழுவிச் சேற்றில் மிதித்ததைப்போல்
33.    கள் விற்று கலப் பணம் சம்பாதிப்பதைவிட கற்பூரம் விற்று கால் பணம் சம்பாதிப்பதே மேல்.
34.    கள்வன் பெண்சாதி கைம்பெண்சாதி
35.    கள்ள மனம் துள்ளும்
36.    கள்ள மாடு சந்தை ஏறாது
37.    கள்ளமில்லா பிள்ளை உள்ளம்
38.    கள்ளன் அச்சம் காடு கொள்ளவில்லை.
39.    கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியும் மட்டும் திருடலாம்
40.    கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே!
41.    கள்ளிக்கு கண்ணீர் கண்ணிலே; நீலிக்குக் கண்ணீர் இமையிலே.
42.    கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்?
43.    கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்வான்
44.    களவெலி வளை எடாது
45.    களை பிடுங்காப் பயிர் காற்பயிர்.
46.    களையில்லா விளை நிலமா?
47.    களையை முளையிலேயே கிள்ளிவிடு
48.    கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் இனிப்பு
49.    கற்பித்தவன் காப்பாற்றுவான்
50.    கற்பில்லா அழகு மணமில்லா பூ
51.    கற்ற இடத்திலேயே வித்தையைக் காட்டலாமா?
52.    கற்றது கை அளவு, கல்லாதது உலகளவு
53.    கற்றோர் அருமை கற்றோர் அறிவர்
54.    கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.
55.    கறக்குற பாலுக்கு உதைக்குது பல்லு போக
56.    கறந்த பால் மடி புகாது
57.    கன்றுக் குட்டியை கட்டச் சொன்னார்களா? கட்டுத் தறியைப் பிடுங்கச் சொன்னார்களா?
58.    கன்றைச் சுமக்க சம்மதித்தால் பசுவை சுமக்க வைப்பார்கள்
59.    கன்னி இருக்க காளை மணம் ஏறலாமா?
60.    கன்னியின் அழகு காண்பவர் கண்ணில்
61.    கன மழை பெய்தாலும் கல்லுக்குள் ஈரம் ஏறாது.
62.    கனவில் கண்ட பணம் செலவுக்கு உதவுமா?
63.    கனிந்த பழம் தானே விழும்
64.    கனியால் மரத்துக்குப் பெயர்; மகனால் தந்தைக்குப் பெயர்.

கா‘ ---  வரிசையில் பழமொழிகள்

65.    காக்கை உட்கார பனம்பழம் விழுந்ததுபோல
66.    காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு
67.    காக்கைக் கூட்டத்தில் குயிலுக்கு என்ன வேலை?
68.    காசில்லாதவனுக்கு வராகன் பேச்சு எதுக்கு?
69.    காசுக்கு ஒரு குதிரை; அதுவும் காற்றைப்போல் பறக்க வேண்டும்.
70.    காசைக் கொடுத்து, குத்து மாடு வாங்கினதுபோல்
71.    காட்டில் எரித்த நிலவும், கானலுக்குப் பெய்த மழையும்
72.    காட்டுக்கு எரித்த நிலா, கானலுக்குப் பெய்த மழை.
73.    காட்டுப்பூனைக்குச் சிவராத்திரி விரதமா?
74.    காட்டு மரத்தடியில் நில்லாதே!
75.    காட்டு வாழை வந்தால் வீட்டு வாழை போகும்.
76.    காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்கு கம்பு பிடுங்கப் பயமா?
77.    காடு எரிந்தால் சந்தன மரம் வேகாதோ?
78.    காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.
79.    காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா?
80.    காணப்பட்டதெல்லாம் அழியப்பட்டது.
81.    காணி ஆசை கோடி கேடு.
82.    காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்.
83.    காத்திருந்தவன் பெண்டாட்டியை நேற்று வந்தவன் கொண்டு போனான்.
84.    காத வழிப் பேரில்லாதவன் கழுதை.
85.    காதல் வியாதிக்கு மருந்திலை
86.    காதலுக்கு கண்ணில்லை; ஆத்திரத்துக்கு அறிவில்லை
87.    காதுக்கு கடுக்கண் இட்டால் முகத்துக்கு அழகு.
88.    காப்பானுக்குக் கள்ளன் இல்லை
89.    காப்பு சொல்லும் கை மெலிவை.
90.    காமாலைக் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்
91.    காய்த்த மரம் கல்லடி படும்
92.    காய்ந்த மரம் துளுக்குமா?
93.    காய்ந்தும் கெடுத்தது, பெய்தும் கெடுத்தது.
94.    கார்த்திகை பின் மழையும் இல்லை; கர்ணனுக்குப் பின் கொடையும் இல்லை.
95.    காராம்பசுவின் பால் வெள்ளை
96.    காராம்பசுவுக்குப் புல்லும் ஆம், நந்தவனத்துக்கு களையும் ஆம்.
97.    காரிகை அற்றுக் கவி சொல்வதிலும் பேரிகை கொட்டிப் பிழைப்பது நன்று.
98.    காரியம் ஆகும்வரை கழுதை காலைப்பிடி.
99.    காரியம் பெரிதா? வீரியம் பெரிதா?
1.    கால் காசு பூனை முக்கால் காசு தயிரைக் குடித்தது போல
2.    கால் பிறழ்ந்தாலும் நா பிறழாதே!
3.    காலம் அறிந்து செயல்படு
4.    காலம் செய்வது ஞாலம் செய்யாது.
5.    காலம் போயும் வார்த்தை நிற்கும்; கப்பல் போயும் துறை நிற்கும்.
6.    காலணாவுக்கு நாலு சத்தியம்
7.    காலத்தில் பெய்த மழைபோல்
8.    காலத்திற்கேற்ற கோலம்
9.    காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாம் நுண்சீலை.
10.    காலுக்குத் தகுந்த செருப்பும் கூலிக்குத் தகுந்த உழைப்பும்.
11.    காவடி பாரம் சுமக்குறவனுக்குத்தானே தெரியும்?
12.    காவிரி ஆறு கஞ்சியாப் போனாலும் நாய்க்கு நக்கித்தான் குடிக்கணும்
13.    காற்றில் துப்பினால் முகத்தில் விழும்
14.    காற்றில்லாமல் தூசி பறக்குமா?
15.    காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்
16.    காற்றுள்ள போதே தூற்று; கரும்புள்ள போதே ஆட்டு.
17.    கான மயிலாட கண்டிருந்த வான்கோழி



கி‘ ---  வரிசையில் பழமொழிகள்

18.    கிட்டாதாயின் வெட்டென மற
19.    கிடப்பது ஒட்டுத்திண்ணையில், கனாக் காண்பது மச்சு மாளிகை.
20.    கிடைப்பது கிடைக்கும்
21.    கிணற்றுக்குத் தப்பி தீயிலே பாய்ந்தான்
22.    கிணற்றுத் தவலைக்கு நாட்டு வளப்பம் ஏன்?
23.    கிணறு வெட்ட பூதம் கிளம்பியது
24.    கிளியை வளர்த்து பூனை கையில் கொடுப்பது போல்
 

கீ‘ ---  வரிசையில் பழமொழிகள்

25.    கீர்த்தியால் பசி தீருமா?
26.    கீரியும் பாம்பும் போல
27.    கீரைக் கடைக்கும் ஒரு எதிர்க் கடை வேண்டும்
28.    கீரைத் தண்டு பிடுங்க ஏலப்பாட்டு ஏன்?
29.    கீழ் குலத்தான் ஆனாலும் கற்றவன் மேற்குலத்தான்
30.    கீழே கிடக்கிற கல்லைத் தூக்கி காலிலே போட்டுக்கொண்டு குத்துதே குடையுதேன்னா எப்படி?
31.    கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லையாம்.
32.    கீறி ஆற்றினால் புண் ஆறும்
 

கு‘ ---  வரிசையில் பழமொழிகள்

33.    குங்குமம் சுமந்த கழுதை வாசனை அறியுமா?
34.    குசவனுக்கு ஆறு மாதம்; தடிக்காரனுக்கு அரை நாளிகை.
35.    குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும்
36.    குட்டையை குழப்பி மீன் பிடிப்பார்
37.    குட்டையைக் குழப்பினால்தான் மீன் பிடிக்க முடியும்
38.    குடத்தில் இட்ட விளக்கு
39.    குடத்தில் பொன் கூத்தாடுமா?
40.    குடம் பாலுக்கு துளி நஞ்சு.
41.    குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்
42.    குடலும் கூந்தலும் கொண்டது கோலம்
43.    குடிகாரன் ஏச்சு நிஜமான பேச்சு
44.    குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு
45.    குடியிருந்து அறி, வழி நடந்து அறி.
46.    குடிப்பது கூழ், கொப்பளிப்பது பன்னீர்.
47.    குடிபோன வீட்டில் பெருச்சாளி உலவும்
48.    குடி மதம் அடிபடத் தீரும்
49.    குடுக்காத இடையன் சினை ஆட்டை காட்டுன மாதிரி
50.    குண்டு சட்டியில் குதிரை ஓட்டினான்
51.    குணம் மாற்ற குரு இல்லை
52.    குத்துகிற உரல் பஞ்சம் அறியுமா?
53.    குதிரை ஏறாமல் கெட்டது; கடன் கேளாமல் கெட்டது.
54.    குதிரை குருடானாலும், கொள்ளு தின்கிறதில் குறையா?
55.    குதிரைக்கு கொள்ளு வைக்கலாம், அதற்காக நாம் அதை சாப்பிட முடியுமா?
56.    குதிரையின் குணம் அறிந்துதான் தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை
57.    குந்தித் தின்றால் குன்றும் கரையும்
58.    குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை
59.    குப்பை உயர்ந்தென்ன? கோபுரம் தாழ்ந்தென்ன?
60.    குப்பையில் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?
61.    குபேரப் பட்டினம் கொள்ளை போனாலும் அதிர்ஷ்டம் இல்லாதவனுக்கு துடைப்பக் கட்டையும் கையில் அகப்படாது.
62.    கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்த்தாம்
63.    கும்பிடு கொடுத்து கும்பிடு வாங்கு
64.    குமரிக்கு ஒரு பிள்ளை, கோடிக்கு ஒரு வெள்ளை.
65.    குயவனுக்கு ஆறு மாதம், தடிக்காரனுக்கு அரை நாழி.
66.    குரங்கு கையில் பூமாலை
67.    குரங்குக்கும் தன் குட்டி பொன் குட்டி.
68.    குரு இல்லாமல் வித்தையில்லை; முதல் இல்லார்க்கு ஊதியமில்லை.
69.    குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.
70.    குருட்டுக் கண்ணுக்கு குறுணி மையிட்டுமென்ன?
71.    குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்தது போல
72.    குருடன் ராஜ பார்வை பார்த்தானாம்
73.    குருடனுக்கு குருடன் கோல் பிடிக்கலாமா?
74.    குருடனுக்குப் பால் கொக்கு போல
75.    குரிவில்லாமல் வித்தையா?
76.    குருவியின் தலையில் பனங்காயை வைத்ததுபோல்
77.    குரைக்கிற நாய் கடிக்காது, கடிக்கிற நாய் குரைக்காது.
78.    குல வழக்கும், இஅடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.
79.    குல வித்தை கற்றுப் பாதி, கல்லாமற் பாதி.
80.    குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே!
81.    குளவிக் கூட்டைக் கோலால் குலைத்தது போல
82.    குளம் காப்பவன் தண்ணீர் குடியானோ?
83.    குளம் வெட்டும் முன்பே முதலை குடி வருமா?
84.    குளத்தில் போட்டுட்டு கிணற்றில் தேடலாமா?
85.    குளிக்கப் போயி சேற்றைத் தடவிக் கொள்வது
86.    குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
87.    குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
88.    குறத்தி பிள்ளை பெற குறவன் கஷாயம் குடிக்கிறான்
89.    குறை குடம் தளும்பும், நிறை குடம் தளும்பாது.
90.    குறையச் சொல்லி நிறைய அள.
91.    குறையேயில்லாதவன் பிறக்கவே இல்லை
92.    குனியக் குனியக் குட்டுவான், குனிந்தவர் நிமிர்ந்தால் குட்டினவன் ஓடுவான்.
 

கூ‘ ---  வரிசையில் பழமொழிகள்

93.    கூடவே இருந்து கொள்ளியைச் செருகினாற்போல்
94.    கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
95.    கூண்டுப் பறவை மீண்டும் பாடாது
96.    கூத்தாட்டுச் சிலம்பம் படை வெட்டுக்கு ஆகுமோ?
97.    கூத்தாடிக்கு கீழே கண்; கூலிக்காரனுக்கு மேலே கண்.
98.    கூத்தாடி கிழக்கே பார்த்தான், கூலிக்காரன் மேற்கே பார்த்தான்.
99.    கூரை ஏறி கோழி பிடிக்காத குருவா வானத்தைக் கீறி வைகுந்தம் காட்டுவான்?

1.    கூரை மேலே சோறு போட்டால் ஆயிரம் காக்கை வரும்
2.    கூலியைக் குறைக்காதே! வேலையைக் கெடுக்காதே!
3.    கூழ் என்றாலும் குடித்தவன் பிழைப்பான்
4.    கூழ் என்றாலும் குளித்துக் குடி, கந்தையானாலும் கசக்கிக் கட்டு.
5.    கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம்; குரங்குக்குத் தேங்காய் கொண்டாட்டம்.
6.    கூழுக்கு மாங்காய் தோற்குமோ?
7.    கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை
 

கெ‘ ---  வரிசையில் பழமொழிகள்

8.    கெட்ட காலத்திலும் நல்ல காலம்
9.    கெட்டாலும் செட்டி, கிழிந்தாலும் பட்டு.
10.    கெட்டும் பட்டிணம் சேர்
11.    கெட்டிக்காரன் புழுகு எட்டு நாள் மட்டும்
12.    கெடுக்கினும் கல்வி கேடுபடாது.
13.    கெடு மதி கண்ணுக்குத் தெரியாது.
14.    கெடுவான் கேடு நினைப்பான்
15.    கெண்டையைப் போட்டு வராலை இழு.
16.    கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்.
17.    கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல
 

கே‘ ---  வரிசையில் பழமொழிகள்

18.    கேப்பார் புத்தி கேட்டு கெடாதே!
19.    கேட்டதெல்லாம் நம்பாதே; நம்பியதையெல்லாம் சொல்லாதே!
20.    கேடு வரும் பின்னே, மதி கெட்டு வரும் முன்னே.
21.    கேள்விப் பேச்சில் பாதி நிஜம்
22.    கேளும் கிளையும் கெட்டோர்க்கு இல்லை.
 

கை‘ ---  வரிசையில் பழமொழிகள்

23.    கை கண்ணில் பட்டது என்று கையை வெட்டிப் போடுவதா?
24.    கையிலே காசு வாயிலே தோசை ஆகுமா?
25.    கைக்கு எட்டினது வாய்க்கு எட்டலை
26.    கைக்கோளனுக்கு கால் புண்ணும், நாய்க்குத் தலைப் புண்ணும் ஆறாது.
27.    கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு?
28.    கைப்பொருளற்றால் கட்டினவளும் பாராள்.
29.    கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி.
30.    கையாளாத ஆயுதம் துருப்பிடிக்கும்
31.    கையில் உண்டென்றால் காத்திருப்பர் ஆயிரம் பேர்
32.    கையில் பிடிப்பது துளசி மாலை; கக்கத்தில் இடுக்குவது கன்னக்கோலாம்.
33.    கையிலே காசு; வாயிலே தோசை.
34.    கையூன்றிக் கரணம் போட வேண்டும்.
35.    கையை பிடித்து கள்ளை வார்த்து, மயிரை பிடித்து பணம் வாங்குறதா?
 

 கொ‘ ---  வரிசையில் பழமொழிகள்

36.    கொட்டினால் தேள்; கொட்டாவிட்டால் பிள்ளைப்பூச்சி.
37.    கொடிக்குச் சுரைக்காய் பாரமா?
38.    கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம்.
39.    கொடுங்கோல் அரசு நெடுநாள் நில்லாது
40.    கொடுங்கோல் மன்னவன் நாட்டிலும் கடும்புலி வாழும் நாடு மேல்  
41.    கொடுத்ததைக் கேட்டால் அடுத்ததாம் பகை.
42.    கொண்டவன் தூற்றினால் கண்டவனும் தூற்றுவான்
43.    கொண்டானும் கொடுத்தானும் ஒன்று; கல்யாணத்தைக் கூட்டி வைத்தவன் வேறு.
44.    கொல்லன் தெருவில் ஊசி விலை போகுமா?
45.    கொல்லுவதும் சோறு, பிழைப்பதும் சோறு.
46.    கொல்லைப் பாழானாலும் குருவிக்குப் பஞ்சமா?
47.    கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான்
48.    கொல்லைக்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.
49.    கொழுக்கட்டைக்குத் தலையும் இல்லை; குறவனுக்கு முறையும் இல்லை.
50.    கொள்ளிக்கு எதிர் போனாலும் வெள்ளிக்கு எதிர் போகக்கூடாது.
51.    கொள்ளும் வரை கொண்டாட்டம், கொண்ட பிறகு திண்டாட்டம்.
52.    கொள்ளை அழகும் கள்ள மனமும்.
53.    கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்.
 

 கோ‘ ---  வரிசையில் பழமொழிகள்

54.    கோடாரிக் காம்பு குலத்துக்கு ஈனன்
55.    கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைய நாக்கு கோடாமை கோடி பெறும்.
56.    கோடானுகோடி கொடுத்தாலும் நாவினால் தவறு சொல்லாதிருப்பது கோடி பெறும்.
57.    கோடி கொடுப்பினும் குடில் பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி பெறும்.
58.    கோடை இடி இடித்தது போல
59.    கோணிக் கோடி கொடுப்பினும் கோணாமல் காணி கொடுப்பது நல்லது.
60.    கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு; பாத்திரம் அறிந்து பிச்சை இடு.
61.    கோபம் அற்றால் குரோதம் ஆறும்
62.    கோபம் சண்டாளம்
63.    கோபம் பாவம்
64.    கோவில் பூனை தேவருக்கு அஞ்சுமா?
65.    கோழி குருடாயிருந்தா என்ன? செவிடாயிருந்தா என்ன? குழம்பு ருசியாயிருந்தா சரி.
66.    கோழி மிதித்து குஞ்சு சாகுமா?
67.    கோழி முட்டைக்கு சவரம் செய்தது போல்
68.    கோழி தின்ற கள்வனும் கூட நின்று குலவுகிறான்
69.    கோள் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு
70.    கோள் சொல்பவனைக் கொடுந்தேள் என நினை.
71.    கோளும் சொல்லி கும்பிடுவானேன்?

Saturday 23 February 2013

‘ஔ‘ - வரிசையில் பழமொழிகள்

1. ஔவை சொல்லுக்கு அச்சம் இல்லை

‘ஓ‘ - வரிசையில் பழமொழிகள்

1.    ஓட்டைக் கப்பலுக்கு ஒம்போது மாலுமி
2.    ஓட்டைச் சட்டியானாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி
3.    ஓட்டைப் பானையை ரொப்ப முடியுமா?
4.    ஓட்டை பானையிலும் சர்க்கரை இருக்கும்.
5.    ஓட்டை மணியானாலும் ஓசை நீங்குமா?
6.    ஓடவும் மாட்டேன் பிடிக்கவும் மாட்டேன்
7.    ஓடி ஒரு கோடி தேடுவதிலும், இருந்து ஒரு காசு தேடுவது நலம்
8.    ஓடியும் கிழவிக்குப் பிறகா?

‘ஒ‘ - வரிசையில் பழமொழிகள்

1.    ஒட்டைக்கூத்தன் பாட்டைக் கேட்டு இரட்டை தாழ்பாள் போட்டது போல.
2.    ஒடிந்த கோல் ஆனாலும் ஊன்றுகோல் ஆகும்
3.    ஒவ்வொரு பொருளும் தத்தம் இடத்தில்
4.    ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு விலை
5.    ஒய்யாரக் கொண்டையிலே தாழம்பூவாம்; உள்ளே இருப்பது ஈரும் பேனாம்.
6.    ஒழுக்கம் உயர் குலத்திலும் நன்று
7.    ஒரு கண்ணில் வெண்ணெய்; மறு கண்ணில் சுண்ணாம்பு.
8.    சூரு காசு கொடாதவன் ஒரு வராகன் கொடுப்பானா?
9.    ஒரு காசு பேணின் இரு காசு தேறும்
10.    ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி உறை மோர்
11.    ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்
12.    ஒரு குண்டிலேயே கோட்டையைப் பிடிக்க முடியுமா?
13.    ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைப்பதா?
14.    ஒரு நேரம் ஒரு நோக்கம்
15.    ஒரு பொதி பஞ்சுக்கு ஒரு பொறி நெருப்பு
16.    ஒரு பொய்யை மறைக்க நூறு பொய்
17.    ஒரு விரல் நொடி இடாது
18.    ஒரு ஊருக்கு ஒமபது வழி
19.    ஒருவர் அறிந்தால் ரகசியம்; இருவர் அறிந்தால் அம்பலம்; மூவர் அறிந்தால் தண்டோரா.
20.    ஒருவரின் நஞ்சு ஒருவரின் மருந்து
21.    ஒருவராய் பிறந்தால் தனிமை; இருவராய் பிறந்தால் பகைமை.
22.    ஒரே கல்லில் இரண்டு மாங்காய்
23.    ஒரே தவறை இருமுறை செய்யாதே!
24.    ஒழுக்கு வீட்டில் வெள்ளம் வந்தது போல
25.    ஒள்ளியர் தெள்ளியர் ஆயினும் ஊழ்வினை மெல்ல நுழைந்து விடும்
26.    ஒளி இல்லாவிட்டால் இருள்; இருள் இல்லாவிட்டால் ஒளி.

‘ஐ‘ - வரிசையில் பழமொழிகள்

1.    ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
2.    ஐந்து வரைதான் அண்ணன் தம்பி; பத்து வயதில் பங்களி.
3.    ஐயமான காரியத்தை செய்யாதே
4.    ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருக்குமா?
5.    ஐயோ என்றாலும் ஆறு மாதம் பாவம் பிடிக்கும்

‘ஏ‘ - வரிசையில் பழமொழிகள்

1.    ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது
2.    ஏடு அறியாதவன் பீடு பெறாதவன்
3.    ஏண்டா புளிய மரத்தில் ஏறினாய் என்றால் பூனைக் குட்டிக்கு புல் பறிக்க என்கிறான்
4.    ஏணைக் கழிக்கு கோணைக் கழி வெட்டுவது
5.    ஏதும் அறியாதான் எதையும் ஐயுறான்
6.    ஏமாந்த சோணகிரி
7.    ஏரி நிறைந்தால் கரை கசியும்
8.    ஏமாந்தால் நாமம் போடுவான்
9.    ஏவா மக்கள் மூவா மருந்து
10.    ஏவுகின்றவனுக்கு வாய்ச்சொல், செய்கின்றவனுக்கு தலைச் சுமை.
11.    ஏழ்மையில் கொடுமை கடன் தொல்லை
12.    ஏழையென்றால் இளக்காரம்
13.    ஏழைக்கேத்த எள்ளுருண்டை
14.    ஏழை சொல் அம்பலம் ஏறாது
15.    ஏற்றம் உண்டென்றால் இறக்கமும் உண்டு
16.    ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச்சொன்னால்  நொண்டிக்குக் கோபம்.
17.    ஏறப்படாத மரத்தில் எண்ணப்படாத் காய்
18.    ஏறவிட்டு ஏணியை வாங்கினது போல