Monday, 25 February 2013

‘த‘---‘தௌ‘ வரிசையில் பழமொழிகள்

‘த‘---வரிசையில் பழமொழிகள்

1.    தகப்பன் வெட்டின கிணறு என்று தலை கீழாக விழலாமா?
2.    தகப்பனுக்கு கட்ட கோவணம் இல்லையாம்; மகன் தஞாவூர் வரைக்கும் நிலப் பாவாடை போடச் சொன்னானாம்.
3.    தங்கத்திலே புரண்டாலும் கழுதை கழுதைதான்!
4.    தங்கம் தரையிலே; தவிடு பானையிலே.
5.    தங்கமானாலும் விலங்கு விலங்குதானே!
6.    தங்க முடி சூட்டினாலும் தங்கள் குணம் விடார் கஞ்சர்
7.    தஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் ஆகாது.
8.    தட்டான் தாய்ப் பொன்னிலும் மாப்பொன் களவெடுப்பான்
9.    தட்டிப் பேசுவார் இல்லேன்னா தம்பி சண்ட பிரசண்டன்
10.    தடவிப் பிடிக்க மயிர் இல்லை, பெயர் மட்டும் சவுரிப்பெருமாள்.
11.    தடி எடுத்தவன் தண்டல்காரன்
12.    தடிக்கு மிகுந்த மிடாவா?
13.    தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும்.
14.    தண்ணீரில் விளைந்த உப்பு தண்ணீரிலேயே கரையும்
15.    தண்ணீரும் மூன்று பிழை பொறுக்கும்
16.    தண்ணீரைக்கூட ஜல்லடையில் வாரலாம், அது உறையும்வரை பொறுத்திருந்தால்.
17.    தண்ணீரையும் தாயையும் பழிக்காதே!
18.    தணிந்த வில்தான் தைக்கும்
19.    தந்தை தாய் பேண்.
20.    தந்தை எவ்வழி தனயன் அவ்வழி.
21.    தம்பியுடையான் படைக்கஞ்சான்.
22.    தயங்கி நிற்பவன் தோற்று நிற்பான்
23.    தயிருக்குச் சட்டி ஆதாரம்; சட்டிக்குத் தயிர் ஆதாரம்.
24.    தருமத்தைப் பாவம் வெல்லாது
25.    தருமம் தலை காக்கும்
26.    தலை இருக்க வால் ஆடலாமா?
27.    தலை எழுத்தைத் தந்திரத்தால் வெல்ல முடியுமா?
28.    தலை கீழாக இருந்து தபசு செய்தாலும் கூடுகிற காலம் வந்துதான் கூட வேண்டும்
29.    தலை சொறியக் கொள்ளி தானே தேடிக்கொண்டாய்
30.    தலைக்குத் தலை நாயகம்
31.    தலைக்கு மேலே வெள்ளம் ஜாண் போனா என்ன? முழம் போனா என்ன?
32.    தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு
33.    தலையை தடவி மூளையை உரிவான்
34.    தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்
35.    தலைவலியும் திருகு வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்
36.    தலைவன் மயக்கம் அனைவர் மயக்கம்
37.    தவத்துக்கு ஒருவர்; கல்விக்கு இருவர்.
38.    தவளை தன் வாயால் கெடும்
39.    தழைத்த மரத்துக்கு நிழல் உண்டு; பிள்ளை பெற்றவளுக்குப் பால் உண்டு.
40.    தவறுக்கு வருந்து; தவறே செய்யாமல் இருப்பது அருமருந்து.
41.    தவறே செய்யாதவன் எதுவுமே செய்யாதவன்
42.    தவிட்டுக்கு வந்த கை தனத்துக்கும் வரும்
43.    தவிட்டை நம்பிப் போக சம்பா அரிசியை நாய் கொண்டு போச்சாம்.
44.    தன் உயிர் போல் மன்னுயிர்க்கு இரங்கு
45.    தன் ஊரில் பேச்சு, பிற ஊரில் ஏச்சு.
46.    தன் ஊருக்கு அன்னம்; அயல் ஊருக்கு காகம்.
47.    தன் ஊருக்கு யானை; அயல் ஊருக்குப் பூனை.
48.    தன் கையே தனக்கு உதவி
49.    தன் குற்றம் இருக்கப் பிறர் குற்றம் பார்ப்பானேன்?
50.    தன் நிலத்தில் குறு முயல் தந்தியிலும் வலியது
51.    தன் பலம் கொண்டு அம்பலம் ஏற வேண்டும்
52.    தன் வாயாலே தான் கெட்டான்
53.    தன் வினை தன்னைச் சுடும், ஓட்டப்பம் வீட்டை சுடும்.
54.    தன் வீட்டுக் கடவைப் பிடுங்கி அடுத்த வீட்டுக்கு வைத்தது போல
55.    தன் வீட்டு விளக்கென்று முத்தமிட்டால் சுடாதோ?
56.    தன்னைக் கொல்ல வரும் பசுவையும் கொல்லலாம்
57.    தன்னையே மறப்பவன் உண்மையில் முட்டாள்
58.    தனக்கு அழகு மொட்டை; பிறர்க்கு அழகு கொண்டை.
59.    தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, எதிரிக்கு இரண்டு கண்ணும் போக வேண்டும்.
60.    தனக்கு தனக்குன்னா, தாச்சீல பதக்கு கொள்ளும்
61.    தனக்கு மிஞ்சித்தான் தானமும் தர்மமும்
62.    தனக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை, எதிரிக்கு சகுனப் பிழை செய்ய வேண்டும்.
63.    தனி மரம் தோப்பாகாது

தா‘---வரிசையில் பழமொழிகள்

64.    தாடி எரியும்போது பீடிக்கு நெருப்பு கேட்பது
65.    தாடிக்கு பூச்சுற்றலாமா?
66.    தாம்பும் அறுதல், தோண்டியும் ஓட்டை.
67.    தாமதமானாலும் பரவாயில்லை, நாமாக தவிர்க்காதவரை
68.    தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும்
69.    தாய் சொல் கேளாத பிள்ளை, நாய் வாயில் சேலை.
70.    தாய் தூற்றினால் ஊர் தூற்றும்
71.    தாய் முகம் காணாத பிள்ளையும், மழை முகம் காணாத பயிரும் உருப்படாது.
72.    தாய்க்குச் சோறு போடுவது ஊருக்குப் புகழ்ச்சியா?
73.    தாய்க்குப் பின் தாரம்
74.    தாய்ப் பாலுக்கு கணக்குப் பார்த்தால் தாலி மிஞ்சுமா?
75.    தாயிற்சிறந்த கோயிலுமில்லை; தந்தை சொல்மிக்க மந்திரமில்லை.
76.    தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறு.
77.    தாயைப் பார்த்து மகளைக் கொள்.
78.    தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை
79.    தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும்
80.    தான் கள்வன், பிறரை நம்பான்.
81.    தான் தின்னி பிள்ளை வளர்க்காள்; தவிடு தின்னி கோழி வளர்க்காள்.
82.    தான் தேடாப் பொன்னுக்கு மாற்றுரை இல்லை.
83.    தானம் கொடுத்த மாட்டை பல்லை பிடித்து பார்த்தானாம்   
84.    தானாகப் பழுக்காத பழத்தை தடி கொண்டு அடித்தால் பழுக்குமா?
85.    தானாக வந்த சீதேவியை காலால் எட்டி உதைத்தானாம்.
86.    தானிக்கும் தீனிக்கும் சரி
87.    தானும் உண்ணான், பிறருக்கும் கொடான்.
88.    தானும் படுக்க மாட்டான், தள்ளியும் படுக்க மாட்டான்.

தி‘---வரிசையில் பழமொழிகள்

89.    திக்கற்றவனுக்கு தெய்வமே துணை.
90.    திரள் எலி வளை எடாது
91.    திரிசங்கு சொர்க்கம்
92.    திருட்டு நாய்க்குச் சலங்கை கட்டினாற்போல
93.    திருடனுக்குத் தய்வமே சாட்சி
94.    திருடிக்குத் தெய்வம் இல்லை; அபசாரிக்கு ஆணை இல்லை.
95.    திருநெல்வேலிக்கே அல்வாவா?
96.    திருவாக்குக்கு எதிர்வாக்குக்கு உண்டா?
97.    திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன
98.    திறந்த கதவு துறவியையும் திருடன் ஆக்கும்
99.    திறந்த வீட்டில் நாய் நுழைந்தாற்போல்
1.    தின்ற நஞ்சு கொல்லும், தின்னாத நஞ்சு கொல்லுமா?
2.    தின்ற மண்ணுக்குத் தகுந்த சோகை.
3.    தினவுக்கு சொரிதல் இதம்
4.    தினை விதைத்தவன் தினை அறுப்பான்

தீ‘---வரிசையில் பழமொழிகள்

5.    தீ வினை செய்யில் பேய் வினை செய்யும்
6.    தீக்குக் காற்று உதவியது போல
7.    தீட்டின மரத்திலேயே பதம் பார்த்தது போல்
8.    தீயோர் பொறை, நல்லோர் துயர்
9.    தீரா வழக்குக்கு தெய்வமே துணை.
10.    தீராக் கோபம் பாடாய் முடியும்

 து‘---வரிசையில் பழமொழிகள்

11.    துட்டு வந்து போட்டியிலே விழுந்ததோ, திட்டு வந்து பொடியிலே விழுந்ததோ?
12.    துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால்
13.    துணிந்தவனுக்கு துக்கம் இல்லை; அழுதவனுக்கு அகங்காரம் இல்லை.
14.    துணிவால் சாதிக்க முடியாத்தை பணிவால் சாதிக்கலாம்
15.    துணிவே துணை
16.    துணையாகப் போனாலும் பிணையாகப் போகாதே!
17.    துப்பாக்கி முனையில் சமாதானம்
18.    துரும்பு தூண் ஆனால், தூண் என்ன ஆகும்?
19.    துரும்பு தூணைத் தாங்குமா?
20.    துலுக்கர் தெருவில் திருவெம்பாவையா?
21.    துழாவி காய்ச்சாதது கஞ்சியுமல்ல; வினாவிக் கட்டாதது கல்யாணமுமல்ல.
22.    துள்ளாதே துள்ளாதே ஆட்டுக்குட்டி; என் கையில் இருக்குது பீச்சாங்கத்தி.
23.    துள்ளுற மாடு பொதி சுமக்காது.
24.    துள்ளும் மான் துள்ளித் துரவில் விழுந்தது
25.    துறவிக்கு வேந்தன் துரும்பு
26.    துன்பமே மனிதனின் உரை கல்
27.    துஷ்டப் பிள்ளைக்கு ஊர் புத்திமதி சொல்லும்
28.    துஷ்டனைக் கண்டால் தூர விலகு

 தூ‘---வரிசையில் பழமொழிகள்

29.    தூக்குனங்குருவி குரங்குக்கு புத்தி சொன்னது போல
30.    தூங்குறவனை எழுப்பலாம், தூங்குற மாதிரி நடிக்கிறவனை எழுப்ப முடியுமா?
31.    தூங்கும் சிங்கத்தை சீண்டாதே!
32.    தூர்ந்த கிணற்றைத் தூர் வாராதே!
33.    தூரத்துத் தண்ணீர் ஆபத்துக்கு உதவாது
34.    தூரத்துப் பச்சை கண்ணுக்கு குளிர்ச்சி.
35.    தூரப் போக வேண்டுமோ கீரைப் பாத்தியிலே கையை வைக்க.

 தெ‘---வரிசையில் பழமொழிகள்

36.    தெய்வம் கொடுத்தாலும் பூசாரி விட மாட்டான்
37.    தெரிந்த எதிரி தெரியாத நண்பனைவிட மேல்
38.    தெற்கே அடித்த காற்று திருப்பி அடிக்காதோ?
39.    தென்றல் முத்தி பெருங்காத்தாச்சு
40.    தென்னை மரத்தில் தேள் கொட்ட பனை மரத்தில் நெறி கட்டியது

 தே‘---வரிசையில் பழமொழிகள்

41.    தேசங்கள்தோறும் பாஷைகள் வெவ்வேறு
42.    தேடாது அழிக்கின் பாடாய் முடியும்.
43.    தேடித் தின்றவர் தெய்வத்துக்கு ஒப்பானவர்
44.    தேடிய மூலிகை காலில் பட்டது போல
45.    தேய்ந்தாலும் சந்தனக் கட்டையின் மணம் போகுமா?
46.    தேரோட போச்சு திருநாளு, தாயோட போச்சு பிறந்த வீடு
47.    தேள் நெருப்பில் விழுந்தால் எடுத்து விட்டவனைக் கொட்டும்
48.    தேன் எடுத்தவன் புறங்கையை நக்குவான்
49.    தேன் உண்டானால் ஈ தேடி வரும்
50.    தேன் ஒழுகப் பேசுவான்
51.    தேனும் தினை மாவும் தெய்வத்துக்கு அர்ப்பணம்

 தொ‘---வரிசையில் பழமொழிகள்

52.    தொட்டில் பழக்கம் சுடு காடு மட்டும்
53.    தொட்டில் பிள்ளைக்கு நடக்குற பிள்ளை நமன்
54.    தொட்டிக் காட்டாத வித்தை சுட்டுப் போட்டாலும் வராது.
55.    தொண்டைக்கு கீழே போனால் நரகம்
56.    தொன்மை நாடி, நன்மை விடாதே.

தோ‘---வரிசையில் பழமொழிகள்

57.    தோணி போனாலும் துறை நிக்கும்
58.    தோல் இருக்கச் சுவை விழுங்கு
59.    தோல்வியே வெற்றிக்கு அறிகுறி
60.    தோளில் இருந்து செவியைக் கடிப்பான்
61.    தோற்றம் ஏமாற்றம்   

‘ஞ‘ --- வரிசையில் பழமொழிகள்

1. ஞானம் எல்லம் ஒரு மூட்டை; உலகம் ஒரு கோட்டை.

‘ச‘ - 'சோ' --- வரிசையில் பழமொழிகள்

ச‘ ---  வரிசையில் பழமொழிகள்

1.    சங்கு ஆயிரம்கொண்டு வங்காளம் போனாலும் தன் பாவம் தன்னோடு.
2.    சட்டி சுட்டது, கையை விட்டது.
3.    சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்
4.    சட்டியில் உள்ளது அகப்பையில் வரும்
5.    சண்ட மாருதத்துக்கு எதிப்பட்ட சருகு
6.    சண்டிக் குதிரை, நொண்டி சாரதி.
7.    சண்டிக் குதிரைக்கு சறுக்கினது சாக்கு.
8.    சத்தியம் வெல்லும்; அசத்தியம் கொல்லும்.
9.    சதை உள்ள இடத்தில கத்தி நாடும்
10.    சந்தியில் அடித்ததற்கு சாட்சி வேறா?
11.    சந்திரன் சண்டாளன் வீட்டிலும் பிரகாசிக்கிறான்.
12.    சந்தேகம் தீரா வியாதி
13.    சந்நியாசி கோவணத்துக்கு இச்சித்து சம்சாரம் மேலிட்டது.
14.    சந்நியாசிக்கும் பழைய குணம் போகாது
15.    சபையிலே நக்கீரன், அரசிலே விற்சேரன்.
16.    சம்பளம் இல்லாத சேவகனும், கோபமில்லாத எசமானனும்.
17.    சர்க்கரை என்று சொன்னால் தித்திக்குமா?
18.    சர்க்கரை தின்று பித்தம் போனால் கழிப்பு மருந்து ஏன் தின்ன வேண்டும்?
19.    சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பெய்தது போல
20.    சரக்கு மலிந்தால் சந்தைக்கு வரும்
21.    சருகைக் கண்டு தணல் அஞ்சுமா?
22.    சளிப் பிடித்ததோ சனிப் பிடித்ததோ?

சா‘ ---  வரிசையில் பழமொழிகள்

23.    சாக்கடையில் கல்லை விடு எறிந்தால் நம் மீதுதான் தெறிக்கும்.
24.    சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் மட்டம்
25.    சாகிறவரைக்கும் சங்கடமானால் வாழ்வது எக்காலம்.
26.    சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல்.
27.    சாட்டை இல்லா பம்பரம் ஆட்டிவைக்க வல்லது.
28.    சாண் ஏறினால் முழம் சறுக்கும்
29.    சாண் பாம்பானாலும் முழத்தடி வேணும்
30.    சாணம் ஒரு கூடை, ஜவ்வாது பணவிடை.
31.    சாத்தான் வேதம் ஓதுகிறதாம்
32.    சாதம் சிந்தினால் பொறுக்கலாம்; நீர் சிந்தினால்?
33.    சாது மிரண்டா காடு கொள்ளாது
34.    சாதுரியப்பூனை மீன் இருக்க, புளியங்காயத் திங்கிறதாம்.
35.    சாற்றுக்கு இல்லாத பூசனிக்காய் பந்தலில் ஆடுது

சி‘ ---  வரிசையில் பழமொழிகள்

36.    சித்தன் போக்கு சிவன் போக்கு.
37.    சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்
38.    சிம்பிலே வலையாதது தடியிலே வளையுமா?
39.    சிரிக்கும் முகத்தில் சீற்றம் ஒளிந்திருக்கும்
40.    சிரித்தால் கூலி; சேவித்தால் சம்பளம்.
41.    சிரு துளி பெரு வெள்ளம்
42.    சிவ பூஜையில் கரடி
43.    சிற்றுணர்வோர் என்றும் சிலுசிலுப்பர்
44.    சிறியார்க்கு இனியது காட்டாதே! சேம்புக்குப் புளிவிட்டு காய்ச்சாதே!
45.    சிறு குழந்தை இல்லாத வீடும் வீடல்ல; சீரகம் இடாத கறியும் கறியல்ல.
46.    சிறு துரும்பும் பல் குத்த உதவும்
47.    சிறு மழை பெரும்புழுதியைத் தணிக்கும்
48.    சிறு மீன் எல்லாம் பெரு மீனுக்கு இரை.
49.    சிறுகக் கட்டி பெருக வாழ்!
50.    சிறுக சிறுகத் தின்றால் மலையையும் தின்னலாம்.
51.    சிறுமையில் கல்வி சிலைமேல் எழுத்து.
52.    சின்ன மீனைப் போட்டு பெரிய மீனை பிடி
53.    சினத்தறுத்த மூக்கு சிரித்தொட்ட ஒட்டுமோ?

 சீ‘ ---  வரிசையில் பழமொழிகள்

54.    சீக்கிர புத்தி பலவீனம்
55.    சீதை பிறக்கவும் இலங்கை அழியவும்
56.    சீலை இல்லை என்று சித்தி வீட்டுக்கு போனாளாம், அவள் ஈச்சம் பாயை கட்டிக்கொண்டு எதிரே வந்தாளாம்.
57.    சீரியர் கெட்டாலும் சீரியரே!
58.    சீவன் போனால் கீர்த்தியும் போகுமோ?
59.    சீனி என்று எழுதி நக்கினால் இனிக்குமா?

 சு‘ ---  வரிசையில் பழமொழிகள்

60.    சுக்கு அறியாத கஷாயம் உண்டோ?
61.    சுகத்துக்குப்பின் துக்கம்.
62.    சுக துக்கம் சுழல் சக்கரம்
63.    சுங்கமும் கூழும் இருக்கத் தடிக்கும்
64.    சுட்ட சட்டி சுவை அறியுமா?
65.    சுட்ட மண்ணும், பச்சை மண்ணும் ஒட்டுமா?
66.    சுட்டாலும் செம்பொன் தன்னொலி கெடாது.
67.    சுடர் விளக்கானாலும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்.
68.    சுடலை ஞானம்
69.    சுண்டக்காய் கால் பணம், சுமைக்கூலி முக்கால் பணம்.
70.    சுத்த வீரனுக்கு உயிர் துரும்பு.
71.    சுத்தம் சோறு போடும், எச்சில் இரக்க வைக்கும்.
72.    சுடும்வரை நெருப்பு, சுற்றும்வரை பூமி, போராடும்வரை மனிதன்.
73.    சும்மா இருக்கிற தம்பிரானுக்கு இரண்டு பட்டை.
74.    சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி.
75.    சுய புத்தி போனாலும் சொல் புத்தி வேண்டாமா?
76.    சுரை இட பாகல் முலைக்குமா?
77.    சுவத்து மேலெ எறிஞ்ச பந்து திரும்ப வந்துதானே ஆக வேண்டும்
78.    சுவர் இருந்தால் சித்திரம் எழுதலாம்.
79.    சுவையான உணவு விரைவாகத் தீரும்
80.    சுற்றத் துணியுமில்லை, நக்கத் தவிடுமில்லை.

 சூ‘ ---  வரிசையில் பழமொழிகள்

81.    சூடு கண்ட பூனை அடுப்பங்கரையில் சேராது.
82.    சூரியனை கையால் மறைத்தது போல
83.    சூரியனைக் கண்ட பனி போல
84.    சூரியனைப் பார்த்து நாய் குரைத்ததாம்.

செ‘ ---  வரிசையில் பழமொழிகள்

85.    செக்களவு பொன் இருந்தாலும் செதுக்கியுண்டால் எத்தனை நாளைக்கு வரும்?
86.    செட்டிக்கு வெள்ளாமை ஜென்மப்பகை.
87.    செட்டிச்சி சிங்காரிக்குமுன் பட்டணம் ப்றிபோயிடும்
88.    செடியில் வணங்காததா மரத்தில் வணங்கும்?
89.    செத்த பாம்பை அடி
90.    செத்தவன் உடைமை இருந்தவனுக்கு அடைக்கலம்.
91.    செம்பு நடமாடினால் குயவன் குடி போய்விடும்.
92.    செய்த வினை செய்தவருக்கு எய்திடும்
93.    செய்யும் தொழில்களில் எல்லாம் நெய்யும் தொழிலுக்கு நிகர் ஏதுமில்லை
94.    செருப்பால் அடித்துக் குடையும், குதிரையும் கொடுப்பது.
95.    செருப்பின் அருமை வெயிலில் தெரியும்; நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.
96.    செருப்புக்காக காலை செதுக்குவார்களா?
97.    செய்வன திருந்த செய்
98.    செல்லும் இடமெல்லம் கற்றவனுக்கு சிறப்பு.
99.    செல்வம் செருக்குது, வாசல் படி வழுக்குது.1.    செல்லும் செல்லாததுக்கும் செட்டியார் இருக்கிறார்.
2.    செல்வன் சொல்லுக்கு அஞ்சான்; வீரன் போருக்கு அஞ்சான்.
3.    செலவில்லாச் செலவு வந்தால் களவில்லாக் களவு வரும்.

சே‘ ---  வரிசையில் பழமொழிகள் 

4.    சேத நினைவுக்கு பூதம் சிரிக்கும்
5.    சேற்றில் புதைந்த யானையை காக்கையும் கொத்தும்
6.    சேற்றிலே செந்தாமரை
7.    சேற்றிலே நட்டு வைத்த கம்பம் போல
8.    சேராத இடம் சேர்ந்தால் துன்பம் வரும்

 சை‘ ---  வரிசையில் பழமொழிகள்

9.    சைகை அறியாதவன் சற்றும் அறியான்.

சொ‘ ---  வரிசையில் பழமொழிகள் 

10.    சொப்பனங்கண்ட அரிசி சோற்றுக்காகுமா?
11.    சொர்க்கத்துக்குப் போகும்போது கக்கத்தில் ராட்டினம் எதுக்கு?
12.    சொல் அம்போ வில் அம்போ?
13.    சொல் கேளாப் பிள்ளையால் குலத்துக்கீனம்.
14.    சொல் வல்லவனை வெல்வது அரிது
15.    சொல் வேறு; செயல் வேறு.
16.    சொல்கிறவனுக்கு வாய்ச்சொல்; செய்கிறவனுக்கு தலைச்சுமை.
17.    சொல்லிச் செய்வர் நல்லோர், சொல்லாமல் செய்வோர் பெரியோர்.
18.    சொல்லிப் போக வேண்டும் சுகத்துக்கு; சொல்லாமல் போக வேண்டும் துக்கத்துக்கு.
19.    சொல்லியும் செய்யார் அசடர்
20.    சொல்லினும் செயல் உத்தமம்
21.    சொல்வது சுலபம், செய்வது கடினம்
22.    சொல்வார் சொன்னால் கேட்பாருக்குப் புத்தி எங்கே போச்சு?
23.    சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை
24.    சொன்னால் வெட்கம், சொல்லாவிட்டால் துக்கம்.

 சோ‘ ---  வரிசையில் பழமொழிகள்

25.    சோம்பல் சோறின்மைக்குப் பிதா.
26.    சோம்பித் த்ரியாதே!
27.    சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோட.
28.    சோம்பேறியின் நாக்கு சோம்பி இருப்பதேயில்லை
29.    சோழியன் குடுமி சும்மா ஆடாது
30.    சோற்றுக்கு கேடு, பூமிக்கு பாரம்

ஜெ‘ ---  வரிசையில் பழமொழிகள் 

31.    ஜென்மக் குருடனுக்கு கண் கிடைத்தாற்போல

‘க‘ --- ‘கௌ‘ வரிசையில் பழமொழிகள்

‘க‘ ---  வரிசையில் பழமொழிகள்
1.    கங்கையில் படிந்தாலும் பேய்ச் சுரைக்காய் நல்ல சுரைக்காய் ஆகாது.
2.    கங்கையில் முழுகினாலும் காக்கை அன்னம் ஆகுமா?
3.    கசப்பை அறியான் இனிப்பை அறியான்
4.    கஞ்சி கண்ட இடம் கைலாசம், சோறு கண்ட இடம் சொர்க்கம்
5.    கட்டக் கரிய இல்லாமல் போனாலும் பேரு பொன்னம்மாள்.
6.    கட்டக் கருத்த பாசிக்கு வழி இல்லையாம், பேரு மட்டும் முத்துமாலை.
7.    கட்டிக்கொடுத்த சோறும் சொல்லிக்கொடுத்த பாடமும் எத்தனை நாள் வரும்?
8.    கட்டி வைத்த பணத்தைத் தட்டிப் பறித்தார்போல.
9.    கட்டின வீட்டுக்கு எட்டு வக்கனை.
10.    கட்டினவனுக்கு ஒரு வீடு; கட்டாதவனுக்கு பல வீடு.
11.    கடக்க வழியறியாதவனுக்கு நடு வீடு காத வழி
12.    கடப்பாறையை எடுத்து பல் குத்துவது போல
13.    கடவுளை நம்பினோர் கைவிடப்படார்
14.    கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?
15.    கடல் திடலாகும்; திடல் கடலாகும்.
16.    கடல் பெருகி மேலிட்டால் கரை ஏது?
17.    கடல் மீனுக்கு நீச்சல் பழகனுமா?
18.    கடல் மீனுக்கு நுழையன் இட்டதே பெயர்
19.    கடல் வற்றி கருவாடு தின்னலாம் என்று உடல் வற்றிச் செத்ததாம் கொக்கு.
20.    கடலில் பெருங்காயத்தை கரைத்தது போல
21.    கடலில் மூழ்குபவரைவிடக் கள்ளில் மூழ்குபவர் அதிகம்
22.    கடலுக்கு கரை போடுவார் உண்டோ?
23.    கடலைத் தாண்ட ஆசை உண்டு, கால்வாயைத் தாண்ட கால்கள் இல்லை.
24.    கடன்காரனை ஏற்றக் கழுவுண்டா?
25.    கடன் வாங்கி கடன் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறி கை விட்டவனும் கெட்டான்.
26.    கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி.
27.    கடன் வாங்கினவன் மறந்தாலும் கடன் கொடுத்தவன் மறக்க மாட்டான்
28.    கடனில்லாக் கஞ்சி கால் வயிறு
29.    கடா பின்வாங்குவது பாய்வதற்கே!
30.    கடிக்கிற நாய் குறைக்காது
31.    கடி கோலில் கட்டிய நாய்
32.    கடிந்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை
33.    கடுகத்தனை நெருப்பும் போர கொழுத்திவிடும்.
34.    கடுகு களவும் களவுதான், கற்பூரம் களவும் களவு தான்.
35.    கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது
36.    கடுகு போன இடம் தேடுவார், பூசனிக்காய் போன இடம் தெரியாது
37.    கடுங்காற்று மழையைக் கூட்டும். கடுஞ்சினேகம் பகை கூட்டும்.
38.    கடுஞ்சொல் தயவைக் கெடுக்கும்.
39.    கடும் வியாதிக்கு கடும் மருந்து
40.    கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்ததுபோல
41.    கடைந்த மோரில் வெண்ணெய் எடுப்பது
42.    கண் கண்டது கை செய்யும்
43.    கண் குருடானாலும் நித்திரை குறையுமா?
44.    கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம்
45.    கண் மண் தெரியாத காதல்
46.    கண்ட பாவனையில் கொண்டையை முடி
47.    கண்டது கேட்டது சொல்லாதே!
48.    கண்டது சொன்னால் கொண்டிடும் பகை
49.    கண்டது பாம்பு; கடித்தது கருக்கு மட்டை.
50.    கண்டது காட்சி; பெற்றது பேறு.
51.    கண்டதே காட்சி; கொண்டதே கோலம்.
52.    கண்டால் அச்சம், காணாவிட்டால் வெறுப்பு
53.    கண்டால் ஒரு பேச்சு; காணாவிட்டால் ஒரு பேச்சு.
54.    கண்டால் காமாச்சி நாயகர், காணவிட்டால் காமாட்டி நாயகர்.
55.    கண்டால் தெரியாதா கம்பளி ஆட்டு மயிர்?
56.    கண்டும் காணவில்லை, கேட்டும் கேட்கவில்லை.
57.    கண்ணாடிக்குள் கண்ட பண முடிச்சுப்போல்
58.    கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல் எறிவதா?
59.    கண்ணான பேரைப் புண்ணாக்கலாமா?
60.    கண்ணில் பட்டால் கரிக்குமா? புருவத்தில் பட்டால் கரிக்குமா?
61.    கண்ணில் எண்ணெய் கரிக்கும்; பிடரியில் எண்ணெய் கரிக்குமா?
62.    கண்ணிலிருந்து மறைந்தால் மனதிலிருந்து மறைவாய்
63.    கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ?
64.    கண்ணிலே மண்ணைத் தூவு
65.    கண்ணுக்குள் சம்மணங்கொட்டுவாள்.
66.    கண்ணு சிறுசு, காண்பதெல்லாம் பெரிசு
67.    கண்ணை இமை காப்பதுபோல்
68.    கண்ணைக் கெடுத்த தெய்வம் புத்தியைக் கொடுக்கும்.
69.    கணக்கன் கணக்கறிவான்; தன் கணக்கைத் தான் அறியான்.
70.    கணக்கன் கணக்கைத் தின்னாவிடில் கணக்கனைக் கணக்குத் தின்று விடும்.
71.    கணக்குப் பார்த்தால் பிணக்கு வரும்
72.    கத்தரிக்காய்க்கு கையும் காலும் முளைத்தது போல
73.    கத்தி எடுத்தவன் கத்தியாலேயே சாவான்
74.    கத்தி முனையில் காதலா?
75.    கத்தி பொன் என்று வயிற்றில் குத்துவதா?
76.    கதிரவன் சிலரைக் காயேன் என்குமா?
77.    கதிரைக் களைந்தும் களையைப் பிடுங்கு
78.    கதைக்குக் காலும் இல்லை, தலையும் இல்லை.
79.    கந்தையானாலும் கசக்கிக் கட்டு
80.    கப்பல்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி; கப்பல் கவிழ்ந்தால் பிச்சைக்காரி.
81.    கப்பல்காரன் வாழ்வு காற்றடித்தால் போச்சு.
82.    கப்பல் ஏரி பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும்?
83.    கப்பல் விட்டு கெட்ட குடி கொட்டை நூற்றால் ஆகுமா?
84.    கம்பத்தில் அஞ்சு ஆனை கட்டுவாள்
85.    கம்பத்தில் ஏறி கரணம் போட்டாலும் கீழே இறங்கி கையேந்த வேண்டும்
86.    கம்பளிமேல் பிசின் போல
87.    கம்பளி விற்ற காசுக்கு மயிர் முளைக்காது
88.    கம்மாலையின் நாய் சம்மட்டி தொனிக்கு அஞ்சுமா?
89.    கமரிலே பால் ஊற்றியதுபோல்
90.    கயிற்றைப் பாம்பெனக் கலங்குவது
91.    கயிறு இல்லாத பம்பரம்போல்
92.    கரணம் தப்பினால் மரணம்
93.    கரி விற்ற பணம் கருப்பாய் இருக்குமா?
94.    கருப்பட்டியிலும் கல் இருக்கும்
95.    கருப்பு வெளுப்பாகாது; கசப்பு இனிப்பாகாது.
96.    கரும்பு இனிது என்று வேரோடு தின்னலாமா?
97.    கரும்பு கசப்பது வாயின் குற்றம்.
98.    கரும்பு கட்டால் கழுதையை அடித்தால் கழுதை அறியுமோ கரும்பு ருசி?
99.    கரும்பு கட்டோடு இருக்க எறும்புதானே வரும்?
1.    கரும்பு தின்னக் கூலியா?
2.    கரும்பு வேம்பாச்சு
3.    கரும்புக்கு உழுத புழுதி காய்ச்சிய பாலுக்குச் சர்க்கரை ஆகுமா?
4.    கருமத்தை முடிப்பவன் கட்டத்தைப் பாரான்
5.    கருமத்தை முடிப்பவன் கடலை ஆராய்வான்
6.    கரை காணாத தோணி.
7.    கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்
8.    கல்யாண வீடு கண்டதும் இல்லை; கொட்டுச் சத்தம் கேட்டதும் இல்லை.
9.    கல்லடிச் சித்தன் போன வழி, காடுமேடெல்லாம் தவிடுபொடி.
10.    கல்லாடம் படித்தவனோடு மல்லாடாதே
11.    கல்லாதவரே கண் இல்லாதவர்.
12.    கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நன்று
13.    கல்லிலே நார் உரிப்பது
14.    கல்லுளிமங்கனுக்கு காடுமேடெல்லாம் தவிடுபொடி
15.    கல்லைக்கூடக் கரைக்கலாம் மனதைக் கரைக்கக் கூடாது.
16.    கல்வி அழகே அழகு.
17.    கல்வி இல்லா செல்வம் கற்பில்லா அழகு.
18.    கல்வி கரை இல, கற்பவர் நாள் சில
19.    கல்விக்கு அழகு கசடற மொழிதல்.
20.    கல்விக்கு இருவர்; களவுக்கு ஒருவர்.
21.    கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்
22.    கலத்திலே சோற்றைப் போட்டு கையைப் பிசைவது போல
23.    கவலை உடையோருக்கு கண்ணுறக்கம் ஏது?
24.    கழுத்து வரை கடன்
25.    கழுதை குதிரை ஆகுமோ? குதிரை கழுதை ஆகுமோ?
26.    கழுதை தேய்ந்து கட்டெறும்பானது
27.    கழுதை மேல் ஏறினால் சுகம் இல்லை.
28.    கழுதைப் புண்ணுக்கு புழுதி மருந்து
29.    கழுதை விட்டை ஆனாலும் கை நிறைய வேண்டும்
30.    கழுதையைக் கட்டி ஓமம் வளர்த்த கதை
31.    கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?
32.    கழுவிக் கழுவிச் சேற்றில் மிதித்ததைப்போல்
33.    கள் விற்று கலப் பணம் சம்பாதிப்பதைவிட கற்பூரம் விற்று கால் பணம் சம்பாதிப்பதே மேல்.
34.    கள்வன் பெண்சாதி கைம்பெண்சாதி
35.    கள்ள மனம் துள்ளும்
36.    கள்ள மாடு சந்தை ஏறாது
37.    கள்ளமில்லா பிள்ளை உள்ளம்
38.    கள்ளன் அச்சம் காடு கொள்ளவில்லை.
39.    கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியும் மட்டும் திருடலாம்
40.    கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே!
41.    கள்ளிக்கு கண்ணீர் கண்ணிலே; நீலிக்குக் கண்ணீர் இமையிலே.
42.    கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்?
43.    கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்வான்
44.    களவெலி வளை எடாது
45.    களை பிடுங்காப் பயிர் காற்பயிர்.
46.    களையில்லா விளை நிலமா?
47.    களையை முளையிலேயே கிள்ளிவிடு
48.    கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் இனிப்பு
49.    கற்பித்தவன் காப்பாற்றுவான்
50.    கற்பில்லா அழகு மணமில்லா பூ
51.    கற்ற இடத்திலேயே வித்தையைக் காட்டலாமா?
52.    கற்றது கை அளவு, கல்லாதது உலகளவு
53.    கற்றோர் அருமை கற்றோர் அறிவர்
54.    கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.
55.    கறக்குற பாலுக்கு உதைக்குது பல்லு போக
56.    கறந்த பால் மடி புகாது
57.    கன்றுக் குட்டியை கட்டச் சொன்னார்களா? கட்டுத் தறியைப் பிடுங்கச் சொன்னார்களா?
58.    கன்றைச் சுமக்க சம்மதித்தால் பசுவை சுமக்க வைப்பார்கள்
59.    கன்னி இருக்க காளை மணம் ஏறலாமா?
60.    கன்னியின் அழகு காண்பவர் கண்ணில்
61.    கன மழை பெய்தாலும் கல்லுக்குள் ஈரம் ஏறாது.
62.    கனவில் கண்ட பணம் செலவுக்கு உதவுமா?
63.    கனிந்த பழம் தானே விழும்
64.    கனியால் மரத்துக்குப் பெயர்; மகனால் தந்தைக்குப் பெயர்.

கா‘ ---  வரிசையில் பழமொழிகள்

65.    காக்கை உட்கார பனம்பழம் விழுந்ததுபோல
66.    காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு
67.    காக்கைக் கூட்டத்தில் குயிலுக்கு என்ன வேலை?
68.    காசில்லாதவனுக்கு வராகன் பேச்சு எதுக்கு?
69.    காசுக்கு ஒரு குதிரை; அதுவும் காற்றைப்போல் பறக்க வேண்டும்.
70.    காசைக் கொடுத்து, குத்து மாடு வாங்கினதுபோல்
71.    காட்டில் எரித்த நிலவும், கானலுக்குப் பெய்த மழையும்
72.    காட்டுக்கு எரித்த நிலா, கானலுக்குப் பெய்த மழை.
73.    காட்டுப்பூனைக்குச் சிவராத்திரி விரதமா?
74.    காட்டு மரத்தடியில் நில்லாதே!
75.    காட்டு வாழை வந்தால் வீட்டு வாழை போகும்.
76.    காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்கு கம்பு பிடுங்கப் பயமா?
77.    காடு எரிந்தால் சந்தன மரம் வேகாதோ?
78.    காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.
79.    காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா?
80.    காணப்பட்டதெல்லாம் அழியப்பட்டது.
81.    காணி ஆசை கோடி கேடு.
82.    காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்.
83.    காத்திருந்தவன் பெண்டாட்டியை நேற்று வந்தவன் கொண்டு போனான்.
84.    காத வழிப் பேரில்லாதவன் கழுதை.
85.    காதல் வியாதிக்கு மருந்திலை
86.    காதலுக்கு கண்ணில்லை; ஆத்திரத்துக்கு அறிவில்லை
87.    காதுக்கு கடுக்கண் இட்டால் முகத்துக்கு அழகு.
88.    காப்பானுக்குக் கள்ளன் இல்லை
89.    காப்பு சொல்லும் கை மெலிவை.
90.    காமாலைக் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்
91.    காய்த்த மரம் கல்லடி படும்
92.    காய்ந்த மரம் துளுக்குமா?
93.    காய்ந்தும் கெடுத்தது, பெய்தும் கெடுத்தது.
94.    கார்த்திகை பின் மழையும் இல்லை; கர்ணனுக்குப் பின் கொடையும் இல்லை.
95.    காராம்பசுவின் பால் வெள்ளை
96.    காராம்பசுவுக்குப் புல்லும் ஆம், நந்தவனத்துக்கு களையும் ஆம்.
97.    காரிகை அற்றுக் கவி சொல்வதிலும் பேரிகை கொட்டிப் பிழைப்பது நன்று.
98.    காரியம் ஆகும்வரை கழுதை காலைப்பிடி.
99.    காரியம் பெரிதா? வீரியம் பெரிதா?
1.    கால் காசு பூனை முக்கால் காசு தயிரைக் குடித்தது போல
2.    கால் பிறழ்ந்தாலும் நா பிறழாதே!
3.    காலம் அறிந்து செயல்படு
4.    காலம் செய்வது ஞாலம் செய்யாது.
5.    காலம் போயும் வார்த்தை நிற்கும்; கப்பல் போயும் துறை நிற்கும்.
6.    காலணாவுக்கு நாலு சத்தியம்
7.    காலத்தில் பெய்த மழைபோல்
8.    காலத்திற்கேற்ற கோலம்
9.    காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாம் நுண்சீலை.
10.    காலுக்குத் தகுந்த செருப்பும் கூலிக்குத் தகுந்த உழைப்பும்.
11.    காவடி பாரம் சுமக்குறவனுக்குத்தானே தெரியும்?
12.    காவிரி ஆறு கஞ்சியாப் போனாலும் நாய்க்கு நக்கித்தான் குடிக்கணும்
13.    காற்றில் துப்பினால் முகத்தில் விழும்
14.    காற்றில்லாமல் தூசி பறக்குமா?
15.    காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்
16.    காற்றுள்ள போதே தூற்று; கரும்புள்ள போதே ஆட்டு.
17.    கான மயிலாட கண்டிருந்த வான்கோழி



கி‘ ---  வரிசையில் பழமொழிகள்

18.    கிட்டாதாயின் வெட்டென மற
19.    கிடப்பது ஒட்டுத்திண்ணையில், கனாக் காண்பது மச்சு மாளிகை.
20.    கிடைப்பது கிடைக்கும்
21.    கிணற்றுக்குத் தப்பி தீயிலே பாய்ந்தான்
22.    கிணற்றுத் தவலைக்கு நாட்டு வளப்பம் ஏன்?
23.    கிணறு வெட்ட பூதம் கிளம்பியது
24.    கிளியை வளர்த்து பூனை கையில் கொடுப்பது போல்
 

கீ‘ ---  வரிசையில் பழமொழிகள்

25.    கீர்த்தியால் பசி தீருமா?
26.    கீரியும் பாம்பும் போல
27.    கீரைக் கடைக்கும் ஒரு எதிர்க் கடை வேண்டும்
28.    கீரைத் தண்டு பிடுங்க ஏலப்பாட்டு ஏன்?
29.    கீழ் குலத்தான் ஆனாலும் கற்றவன் மேற்குலத்தான்
30.    கீழே கிடக்கிற கல்லைத் தூக்கி காலிலே போட்டுக்கொண்டு குத்துதே குடையுதேன்னா எப்படி?
31.    கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லையாம்.
32.    கீறி ஆற்றினால் புண் ஆறும்
 

கு‘ ---  வரிசையில் பழமொழிகள்

33.    குங்குமம் சுமந்த கழுதை வாசனை அறியுமா?
34.    குசவனுக்கு ஆறு மாதம்; தடிக்காரனுக்கு அரை நாளிகை.
35.    குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும்
36.    குட்டையை குழப்பி மீன் பிடிப்பார்
37.    குட்டையைக் குழப்பினால்தான் மீன் பிடிக்க முடியும்
38.    குடத்தில் இட்ட விளக்கு
39.    குடத்தில் பொன் கூத்தாடுமா?
40.    குடம் பாலுக்கு துளி நஞ்சு.
41.    குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்
42.    குடலும் கூந்தலும் கொண்டது கோலம்
43.    குடிகாரன் ஏச்சு நிஜமான பேச்சு
44.    குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு
45.    குடியிருந்து அறி, வழி நடந்து அறி.
46.    குடிப்பது கூழ், கொப்பளிப்பது பன்னீர்.
47.    குடிபோன வீட்டில் பெருச்சாளி உலவும்
48.    குடி மதம் அடிபடத் தீரும்
49.    குடுக்காத இடையன் சினை ஆட்டை காட்டுன மாதிரி
50.    குண்டு சட்டியில் குதிரை ஓட்டினான்
51.    குணம் மாற்ற குரு இல்லை
52.    குத்துகிற உரல் பஞ்சம் அறியுமா?
53.    குதிரை ஏறாமல் கெட்டது; கடன் கேளாமல் கெட்டது.
54.    குதிரை குருடானாலும், கொள்ளு தின்கிறதில் குறையா?
55.    குதிரைக்கு கொள்ளு வைக்கலாம், அதற்காக நாம் அதை சாப்பிட முடியுமா?
56.    குதிரையின் குணம் அறிந்துதான் தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை
57.    குந்தித் தின்றால் குன்றும் கரையும்
58.    குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை
59.    குப்பை உயர்ந்தென்ன? கோபுரம் தாழ்ந்தென்ன?
60.    குப்பையில் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?
61.    குபேரப் பட்டினம் கொள்ளை போனாலும் அதிர்ஷ்டம் இல்லாதவனுக்கு துடைப்பக் கட்டையும் கையில் அகப்படாது.
62.    கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்த்தாம்
63.    கும்பிடு கொடுத்து கும்பிடு வாங்கு
64.    குமரிக்கு ஒரு பிள்ளை, கோடிக்கு ஒரு வெள்ளை.
65.    குயவனுக்கு ஆறு மாதம், தடிக்காரனுக்கு அரை நாழி.
66.    குரங்கு கையில் பூமாலை
67.    குரங்குக்கும் தன் குட்டி பொன் குட்டி.
68.    குரு இல்லாமல் வித்தையில்லை; முதல் இல்லார்க்கு ஊதியமில்லை.
69.    குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.
70.    குருட்டுக் கண்ணுக்கு குறுணி மையிட்டுமென்ன?
71.    குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்தது போல
72.    குருடன் ராஜ பார்வை பார்த்தானாம்
73.    குருடனுக்கு குருடன் கோல் பிடிக்கலாமா?
74.    குருடனுக்குப் பால் கொக்கு போல
75.    குரிவில்லாமல் வித்தையா?
76.    குருவியின் தலையில் பனங்காயை வைத்ததுபோல்
77.    குரைக்கிற நாய் கடிக்காது, கடிக்கிற நாய் குரைக்காது.
78.    குல வழக்கும், இஅடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.
79.    குல வித்தை கற்றுப் பாதி, கல்லாமற் பாதி.
80.    குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே!
81.    குளவிக் கூட்டைக் கோலால் குலைத்தது போல
82.    குளம் காப்பவன் தண்ணீர் குடியானோ?
83.    குளம் வெட்டும் முன்பே முதலை குடி வருமா?
84.    குளத்தில் போட்டுட்டு கிணற்றில் தேடலாமா?
85.    குளிக்கப் போயி சேற்றைத் தடவிக் கொள்வது
86.    குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
87.    குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
88.    குறத்தி பிள்ளை பெற குறவன் கஷாயம் குடிக்கிறான்
89.    குறை குடம் தளும்பும், நிறை குடம் தளும்பாது.
90.    குறையச் சொல்லி நிறைய அள.
91.    குறையேயில்லாதவன் பிறக்கவே இல்லை
92.    குனியக் குனியக் குட்டுவான், குனிந்தவர் நிமிர்ந்தால் குட்டினவன் ஓடுவான்.
 

கூ‘ ---  வரிசையில் பழமொழிகள்

93.    கூடவே இருந்து கொள்ளியைச் செருகினாற்போல்
94.    கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
95.    கூண்டுப் பறவை மீண்டும் பாடாது
96.    கூத்தாட்டுச் சிலம்பம் படை வெட்டுக்கு ஆகுமோ?
97.    கூத்தாடிக்கு கீழே கண்; கூலிக்காரனுக்கு மேலே கண்.
98.    கூத்தாடி கிழக்கே பார்த்தான், கூலிக்காரன் மேற்கே பார்த்தான்.
99.    கூரை ஏறி கோழி பிடிக்காத குருவா வானத்தைக் கீறி வைகுந்தம் காட்டுவான்?

1.    கூரை மேலே சோறு போட்டால் ஆயிரம் காக்கை வரும்
2.    கூலியைக் குறைக்காதே! வேலையைக் கெடுக்காதே!
3.    கூழ் என்றாலும் குடித்தவன் பிழைப்பான்
4.    கூழ் என்றாலும் குளித்துக் குடி, கந்தையானாலும் கசக்கிக் கட்டு.
5.    கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம்; குரங்குக்குத் தேங்காய் கொண்டாட்டம்.
6.    கூழுக்கு மாங்காய் தோற்குமோ?
7.    கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை
 

கெ‘ ---  வரிசையில் பழமொழிகள்

8.    கெட்ட காலத்திலும் நல்ல காலம்
9.    கெட்டாலும் செட்டி, கிழிந்தாலும் பட்டு.
10.    கெட்டும் பட்டிணம் சேர்
11.    கெட்டிக்காரன் புழுகு எட்டு நாள் மட்டும்
12.    கெடுக்கினும் கல்வி கேடுபடாது.
13.    கெடு மதி கண்ணுக்குத் தெரியாது.
14.    கெடுவான் கேடு நினைப்பான்
15.    கெண்டையைப் போட்டு வராலை இழு.
16.    கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்.
17.    கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல
 

கே‘ ---  வரிசையில் பழமொழிகள்

18.    கேப்பார் புத்தி கேட்டு கெடாதே!
19.    கேட்டதெல்லாம் நம்பாதே; நம்பியதையெல்லாம் சொல்லாதே!
20.    கேடு வரும் பின்னே, மதி கெட்டு வரும் முன்னே.
21.    கேள்விப் பேச்சில் பாதி நிஜம்
22.    கேளும் கிளையும் கெட்டோர்க்கு இல்லை.
 

கை‘ ---  வரிசையில் பழமொழிகள்

23.    கை கண்ணில் பட்டது என்று கையை வெட்டிப் போடுவதா?
24.    கையிலே காசு வாயிலே தோசை ஆகுமா?
25.    கைக்கு எட்டினது வாய்க்கு எட்டலை
26.    கைக்கோளனுக்கு கால் புண்ணும், நாய்க்குத் தலைப் புண்ணும் ஆறாது.
27.    கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு?
28.    கைப்பொருளற்றால் கட்டினவளும் பாராள்.
29.    கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி.
30.    கையாளாத ஆயுதம் துருப்பிடிக்கும்
31.    கையில் உண்டென்றால் காத்திருப்பர் ஆயிரம் பேர்
32.    கையில் பிடிப்பது துளசி மாலை; கக்கத்தில் இடுக்குவது கன்னக்கோலாம்.
33.    கையிலே காசு; வாயிலே தோசை.
34.    கையூன்றிக் கரணம் போட வேண்டும்.
35.    கையை பிடித்து கள்ளை வார்த்து, மயிரை பிடித்து பணம் வாங்குறதா?
 

 கொ‘ ---  வரிசையில் பழமொழிகள்

36.    கொட்டினால் தேள்; கொட்டாவிட்டால் பிள்ளைப்பூச்சி.
37.    கொடிக்குச் சுரைக்காய் பாரமா?
38.    கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம்.
39.    கொடுங்கோல் அரசு நெடுநாள் நில்லாது
40.    கொடுங்கோல் மன்னவன் நாட்டிலும் கடும்புலி வாழும் நாடு மேல்  
41.    கொடுத்ததைக் கேட்டால் அடுத்ததாம் பகை.
42.    கொண்டவன் தூற்றினால் கண்டவனும் தூற்றுவான்
43.    கொண்டானும் கொடுத்தானும் ஒன்று; கல்யாணத்தைக் கூட்டி வைத்தவன் வேறு.
44.    கொல்லன் தெருவில் ஊசி விலை போகுமா?
45.    கொல்லுவதும் சோறு, பிழைப்பதும் சோறு.
46.    கொல்லைப் பாழானாலும் குருவிக்குப் பஞ்சமா?
47.    கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான்
48.    கொல்லைக்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.
49.    கொழுக்கட்டைக்குத் தலையும் இல்லை; குறவனுக்கு முறையும் இல்லை.
50.    கொள்ளிக்கு எதிர் போனாலும் வெள்ளிக்கு எதிர் போகக்கூடாது.
51.    கொள்ளும் வரை கொண்டாட்டம், கொண்ட பிறகு திண்டாட்டம்.
52.    கொள்ளை அழகும் கள்ள மனமும்.
53.    கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்.
 

 கோ‘ ---  வரிசையில் பழமொழிகள்

54.    கோடாரிக் காம்பு குலத்துக்கு ஈனன்
55.    கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைய நாக்கு கோடாமை கோடி பெறும்.
56.    கோடானுகோடி கொடுத்தாலும் நாவினால் தவறு சொல்லாதிருப்பது கோடி பெறும்.
57.    கோடி கொடுப்பினும் குடில் பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி பெறும்.
58.    கோடை இடி இடித்தது போல
59.    கோணிக் கோடி கொடுப்பினும் கோணாமல் காணி கொடுப்பது நல்லது.
60.    கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு; பாத்திரம் அறிந்து பிச்சை இடு.
61.    கோபம் அற்றால் குரோதம் ஆறும்
62.    கோபம் சண்டாளம்
63.    கோபம் பாவம்
64.    கோவில் பூனை தேவருக்கு அஞ்சுமா?
65.    கோழி குருடாயிருந்தா என்ன? செவிடாயிருந்தா என்ன? குழம்பு ருசியாயிருந்தா சரி.
66.    கோழி மிதித்து குஞ்சு சாகுமா?
67.    கோழி முட்டைக்கு சவரம் செய்தது போல்
68.    கோழி தின்ற கள்வனும் கூட நின்று குலவுகிறான்
69.    கோள் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு
70.    கோள் சொல்பவனைக் கொடுந்தேள் என நினை.
71.    கோளும் சொல்லி கும்பிடுவானேன்?

Saturday, 23 February 2013

‘ஔ‘ - வரிசையில் பழமொழிகள்

1. ஔவை சொல்லுக்கு அச்சம் இல்லை

‘ஓ‘ - வரிசையில் பழமொழிகள்

1.    ஓட்டைக் கப்பலுக்கு ஒம்போது மாலுமி
2.    ஓட்டைச் சட்டியானாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி
3.    ஓட்டைப் பானையை ரொப்ப முடியுமா?
4.    ஓட்டை பானையிலும் சர்க்கரை இருக்கும்.
5.    ஓட்டை மணியானாலும் ஓசை நீங்குமா?
6.    ஓடவும் மாட்டேன் பிடிக்கவும் மாட்டேன்
7.    ஓடி ஒரு கோடி தேடுவதிலும், இருந்து ஒரு காசு தேடுவது நலம்
8.    ஓடியும் கிழவிக்குப் பிறகா?

‘ஒ‘ - வரிசையில் பழமொழிகள்

1.    ஒட்டைக்கூத்தன் பாட்டைக் கேட்டு இரட்டை தாழ்பாள் போட்டது போல.
2.    ஒடிந்த கோல் ஆனாலும் ஊன்றுகோல் ஆகும்
3.    ஒவ்வொரு பொருளும் தத்தம் இடத்தில்
4.    ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு விலை
5.    ஒய்யாரக் கொண்டையிலே தாழம்பூவாம்; உள்ளே இருப்பது ஈரும் பேனாம்.
6.    ஒழுக்கம் உயர் குலத்திலும் நன்று
7.    ஒரு கண்ணில் வெண்ணெய்; மறு கண்ணில் சுண்ணாம்பு.
8.    சூரு காசு கொடாதவன் ஒரு வராகன் கொடுப்பானா?
9.    ஒரு காசு பேணின் இரு காசு தேறும்
10.    ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி உறை மோர்
11.    ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்
12.    ஒரு குண்டிலேயே கோட்டையைப் பிடிக்க முடியுமா?
13.    ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைப்பதா?
14.    ஒரு நேரம் ஒரு நோக்கம்
15.    ஒரு பொதி பஞ்சுக்கு ஒரு பொறி நெருப்பு
16.    ஒரு பொய்யை மறைக்க நூறு பொய்
17.    ஒரு விரல் நொடி இடாது
18.    ஒரு ஊருக்கு ஒமபது வழி
19.    ஒருவர் அறிந்தால் ரகசியம்; இருவர் அறிந்தால் அம்பலம்; மூவர் அறிந்தால் தண்டோரா.
20.    ஒருவரின் நஞ்சு ஒருவரின் மருந்து
21.    ஒருவராய் பிறந்தால் தனிமை; இருவராய் பிறந்தால் பகைமை.
22.    ஒரே கல்லில் இரண்டு மாங்காய்
23.    ஒரே தவறை இருமுறை செய்யாதே!
24.    ஒழுக்கு வீட்டில் வெள்ளம் வந்தது போல
25.    ஒள்ளியர் தெள்ளியர் ஆயினும் ஊழ்வினை மெல்ல நுழைந்து விடும்
26.    ஒளி இல்லாவிட்டால் இருள்; இருள் இல்லாவிட்டால் ஒளி.