Saturday 23 February 2013

‘ஒ‘ - வரிசையில் பழமொழிகள்

1.    ஒட்டைக்கூத்தன் பாட்டைக் கேட்டு இரட்டை தாழ்பாள் போட்டது போல.
2.    ஒடிந்த கோல் ஆனாலும் ஊன்றுகோல் ஆகும்
3.    ஒவ்வொரு பொருளும் தத்தம் இடத்தில்
4.    ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு விலை
5.    ஒய்யாரக் கொண்டையிலே தாழம்பூவாம்; உள்ளே இருப்பது ஈரும் பேனாம்.
6.    ஒழுக்கம் உயர் குலத்திலும் நன்று
7.    ஒரு கண்ணில் வெண்ணெய்; மறு கண்ணில் சுண்ணாம்பு.
8.    சூரு காசு கொடாதவன் ஒரு வராகன் கொடுப்பானா?
9.    ஒரு காசு பேணின் இரு காசு தேறும்
10.    ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி உறை மோர்
11.    ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்
12.    ஒரு குண்டிலேயே கோட்டையைப் பிடிக்க முடியுமா?
13.    ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைப்பதா?
14.    ஒரு நேரம் ஒரு நோக்கம்
15.    ஒரு பொதி பஞ்சுக்கு ஒரு பொறி நெருப்பு
16.    ஒரு பொய்யை மறைக்க நூறு பொய்
17.    ஒரு விரல் நொடி இடாது
18.    ஒரு ஊருக்கு ஒமபது வழி
19.    ஒருவர் அறிந்தால் ரகசியம்; இருவர் அறிந்தால் அம்பலம்; மூவர் அறிந்தால் தண்டோரா.
20.    ஒருவரின் நஞ்சு ஒருவரின் மருந்து
21.    ஒருவராய் பிறந்தால் தனிமை; இருவராய் பிறந்தால் பகைமை.
22.    ஒரே கல்லில் இரண்டு மாங்காய்
23.    ஒரே தவறை இருமுறை செய்யாதே!
24.    ஒழுக்கு வீட்டில் வெள்ளம் வந்தது போல
25.    ஒள்ளியர் தெள்ளியர் ஆயினும் ஊழ்வினை மெல்ல நுழைந்து விடும்
26.    ஒளி இல்லாவிட்டால் இருள்; இருள் இல்லாவிட்டால் ஒளி.

No comments:

Post a Comment